பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பூர்ணசந்திரோதயம் - 4 ஏதாவது வழி செய்துதான் தீரவேண்டும். இங்கே நடந்த விஷயங்களையெல்லாம் பாராக்காரர் போலீஸ் கமிஷனர் முதலிய எல்லோரும் கண்ணாரக் கண்டிருக்கிறார்கள். ஆகையால், நீர் பொய்யான முகாந்திரம் எதையாவது சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கலாம். நீங்கள் எந்த நியாயஸ்தலத்துக்குப் போனாலும் தப்ப முடியாது. எந்த இடத்திலும், நான் என்னுடைய நியாயத்தை எடுத்துச் சொல்லி இங்கே இருக்கும் மனிதர்களை சாட்சியாக வரித்தால், எல்லோருக்கும் உண்மை விளங்கிப்போம். ஆகையால், நீங்கள் இனி என்னை ஏமாற்றி விட்டுப் போக முடியாது. என்ன சொல்லுகிறீர்கள்? இவ்வளவு தூரம் நீங்கள் என்னைப் பலாத்காரம் செய்து என் கற்பை அழித்தபிறகு, என்னை அநாதையாக விட்டுப்போனால், நான் இனி எப்படி ஜீவனம் செய்வேன்? இனி எந்தப் புருஷர் என்னை ஏற்றக்கொள்வார்? ஆகையால், நீங்கள் என்னைக் கலியாணமாவது செய்து கொள்ளுங்கள், அல்லது என்னுடைய ஆயிசுகால பரியந்தம் என்னை உங்களுடைய வைப்பாட்டியாகவாவது வைத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டில் ஒன்றை நீங்கள் செய்யாத வரையில் நான் உங்களைவிடப் போகிறதில்லை. நீங்கள் என்னை இப்படியே கொன்று போட்டுவிட்டாலும், அதுவும் எனக்குச்சம்மதமே. என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். ஆனால், நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்து மாத்திரம் போக நான் விடமாட்டேன்’ என்று கூறிய வண்ணம் கலியான சுந்தரத்தைப் பலமாக அறைக்குள் இழுத்தாள்.

அதற்குள் போலீஸ் கமிஷனர், வேலைக்காரியினது உதவியால் ஷண்முகவடிவைத் தூக்கி அப்புறப்படுத்த எத்தனிக்க, அங்கிருந்த பாராக்காரன் கலியாணசுந்தரமும் அபிராமியும் இருந்த அறையின் வாசல்கதவை மூடி வெளியில் தாளிட்டு விட்டான். அதன்பிறகு போலீஸ் கமிஷனர் முதலியோர்ஷண்முகவடிவை என்ன செய்தார்கள் என்பதாவது,