பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - பூர்ணசந்திரோதயம்-4 என்னும் பெண்ணைப் பலாத்காரம் செய்து கெடுத்தீரல்லவா. அந்தப் பெண் நீர் நோய் கொண்டு படுத்திருந்த காலத்தில் அடிக்கடி இங்கே வந்து உம்மைப் பார்த்துவிட்டுப் போனதன்றி, அவள் விஷயத்தில் நீர் செய்த அக்கிரமங்களை எல்லாம் கண்டு நியாயாதிபதிக்கு ஒரு மனு அனுப்பிக் கொண்டாள். அவர் எங்களை எல்லாம் அழைத்து விசாரணை செய்து, அவள் எழுதியிருந்த பிராது உண்மைதான் என்று அறிந்து கொண்டார். நீர் படுக்கையை விட்டு எழுந்திருக்கமாட்டாத நிலைமையில் இருந்தபடியால் அவர் உம்மை விசாரிக்காமலேயே தீர்ப்புச் சொல்லிவிட்டார். அந்தப் பெண்ணை நீர் பலாத்காரம் செய்து கற்பழித்தது உண்மை எனத் தெரிவதாலும், அதற்காக உமக்கு எவ்விதத் தண்டனையும் செய்துவைக்க அந்தப் பெண் விரும்பவில்லை ஆகையாலும், அவளை நீர் ஆயிசு கால பரியந்தம் சம்சாரமாக வைத்து ரrவிக்க வேண்டும் என்று அவர் தீர்ப்புச் சொல்லிவிட்டார். ஆனால், அவளை நீர் சாஸ்திரப்படி கலியாணம் செய்துகொண்டாலும் சரி, இல்லாவிட்டால் எவ்வித சடங்குமின்றி சம்சாரம்போல பாவித்துக் கொண்டாலும் சரி, அது உங்கள் இருவருடைய இவர் டத்தைப் பொருத்த தென்றும் அவர் முடிவு செய்திருக்கிறார். ஆகையால், அந்தத் தீர்மானத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு அந்தப் பெண் எனக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பிக் கொண்டிருக்கிறாள். அதன் சாராம்சம் என்னவென்றால், நீர் நோயில் பட்டு நிரம் பவும் கேவலமான நிலைமையில் இருப்பதாலும், முதல் தரமான தாதுபுஷ்டி மருந்துகள் எவ்வளவு கொடுத்தாலும் உம்முடைய உடம்பு தேறாமல் இருப்பதாலும் அவள் உம்முடைய தேகஸ் திதியைப் பற்றி நிரம் பவும் கவலையும் அச்சமும் கொள்கிறாளாம். உம்மை அவள் உடனே அழைத்துக்கொண்டு போய் இந்த ஊரில் அவள் புதிதாக வாங்கி இருக்கும் ஜாகையில் வைத்துக் கொண்டு மருந்துகள் கொடுத்து உம்முடைய உடம்பைத் தேற்ற உத்தேசிக்கிறாளாம். அவளை விட்டுப் பிரிந்திருக்கும் ஏக்கத்தினாலேயே உம்முடைய உடம்பு