பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பூர்ணசந்திரோதயம் - 5 விடுத்துப் பருகுவித்தாள். அவ்வாறு தண்ணீரைப்பருகியவுடன் களைப்படைந்த ஷண்முகவடிவு தனது கண்களை மூடிச் சிறிது நேரம் உறங்கியபின் களை தெளிந்தவளாய்த் தனது கண்களை நன்றாகத் திறந்துகொண்டாள். அதுவரையில் மெளனமாகவும் வியப்பே வடிவாகவும் உட்கார்ந்து அவளது முகமாறுபாட்டை கவனித்துக் கொண்டிருந்த ஹேமாபாயி, அதற்குமேல் ஷண்முக வடிவு பிழைத்துக் கொள்வாள் என்ற ஒருவித நம்பிக்கையும் மனவெழுச்சியும் கொண்டவளாய் வேலைக்காரியை நோக்கி, ‘அடி இந்தப்பெண் யாரோ, இவளுக்கு யாரால் இப்படிப்பட்ட துன்பம் சம்பவித்ததோ. இவள் இப்படி ஸ் மரணை தப்பிக் கிடக்கும்படி இவளை என்ன செய்தார்களோ என்ற விவரத்தை எல்லாம் நாம் இவளிடத்திலிருந்து தெரிந்துகொள்ள வேண்டும். நாம் தெருவுக்குப் பக்கத்தில் இருந்து இவளோடு பேசிக் கொண்டிருந்தால் ஜனங்கள் கூடிவிடுவார்கள். அதுவுமன்றி இப்போது பால்காரன் வருகிற நேரமாய் விட்டது. அவன் வந்து, கதவைத் தட்டினால் நாம் அதைத் திறந்துவிட வேண்டி யிருக்கும். அவன் உள்ளே வந்து பார்த்து விஷயத்தைத் தெரிந்து கொண்டு அவன் போகுமிடத்தில் எல்லாம் இதைச்

சொல்லுவான். இந்தப் பெண் யார்வீட்டுப் பெண் என்பதும், இவளுடைய நிலைமை எப்படிப்பட்டது என்பதும் நமக்குத் தெரிகிறவரையில், இவள் இங்கே வந்த வரலாற்றை நாம் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். ஆகையால், நாம் முதலில் இவளை மெதுவாகத் தூக்கி எடுத்து மேல் மெத்தைக்குக் கொண்டுபோய் அவ்விடத்தில் படுக்கவைத்து இவளுக்கு ஆகவேண்டியதைக் கவனிப்போம்” என்றாள்.

வேலைக்காரி, ‘ஆம்; அதுதான் நல்ல யோசனை: அப்படியே செய்வோம். நீங்கள் இப்படித் தலைப்பக்கமாய் பிடித்துத் தூக்குங்கள். நான்கால்பக்கத்தில் பிடித்துத்துக்குகிறேன்’ என்று கூறிய வண்ணம் ஷண்முகவடிவின்பக்கத்தில் நெருங்கிஅவளது கால்களை ஒன்றாகத் சேர்த்துப் பிடித்து எத்தனித்தாள். அவளது கை கால்களில் பட்டவுடனேஷண்முகவடிவின் உடம்புதுள்ளிக்