பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O பூர்ணசந்திரோதயம் -5 இருவரிடத்திலும் பெருத்த பணத்தொகை கொடுத்து, நீல லோசனி அம்மாளை ஜாக் கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படியும் தாம் அந்தப் பெண்களின் சகோதரர்ஆதலால் அவர்களெல்லோரையும் தாம் அதிசீக்கிரத்தில் தஞ்சைக்கே அழைத்துக் கொள்வதாகவும் சொல்லியபின் அவ்விடத்தை விட்டுத் தஞ்சைக்கு வந்துசேர்ந்தார். வந்தவர் வேலைக்காரி யோடு நேராகத் தமது மாளிகையை அடைந்து, அவ்விடத்தில் தங்களது ஸ்நானம் போஜனம் முதலியவை முடிந்தவுடன் அவளை நோக்கி, “என்ன கருப்பாயி! நாம் இப்போது எங்கே போகலாம்? நேராக சக்கா நாயக்கர் தெரு 13வது இலக்கமுள்ள வீட்டுக்குப் போகலாமா? இல்லாவிட்டால், உங்களைகோலாப் பூரிலிருந்து அழைத்து வந்த பெண்பிள்ளையின் வீட்டுக்குப் போய், அவளிடம் சரியான விலாசம் இன்னதென்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டு போவோமா?’ என்றார்.

கருப்பாயி, “எங்களை அழைத்து வந்த அம்மாள் இருக்கும் தெருவின் பெயர் வீட்டுக் கதவிலக்கம் முதலிய விவரங்களை நான் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அந்த வீடு எங்கே இருக்கிறதென்ற அடையாளம் எனக்குத் தெரியாது. ஆகையால், நாம் நேராக சக்கா நாயக்கர் தெரு 13வது இலக்கமுள்ள வீட்டுக் கே போய் விடுவோம். அந்த விலாசத்தில்தான் சோமசுந்தரம்பிள்ளைகமலத்தம்மாள் முதலியோர் இருப்பதாக அவர்கள் பேசிக்கொண்டது நன்றாக நினைவிருக்கிறது. நாம் இன்னொருதரம் அந்த அம்மாளிடம் போய்க் கேட்க வேண்டிய அவசியமில்லை” என்றாள்.

உடனே நீலமேகம்பிள்ளைதமது ஸாரட்டில் அந்த வேலைக் காரியை உட்கார வைத்துக்கொண்டு தமது மாளிகையை விட்டுப் புறப்பட்டு சக்கா நாயக்கர் தெருவை அடைந்து கதவிலக்கங் களைப் பார்த்துக் கொண்டே போய் 13வது இலக்கமுள்ள வீட்டை அடைந்தார். அந்த மாளிகை பெருத்த சீமானது இருப்பிடம் போல பிரம்மாண்டமாகவும் நேர்த்தியாகவும்