பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 185 போய்ப் பார்த்ததில் என்னுடைய மனக்குழப்பம் அதிகமாகி விட்டது. ஷண்முகவடிவும் வேலைக்காரியும் அதே வீட்டில் தான் வந்து இறங்கினார்களாம். அவர்களை அழைத்து வந்த அம்மணிபாயி அதே வீட்டில் இருக்கிறாள். அவள் சக்கா நாயக்கர் தெரு 13வது இலக்கமுள்ள வீட்டிலிருக்கும் கமலத்தி னிடம் அழைத்துக்கொண்டு போனாளென்று வேலைக்காரி உறுதியாகச் சொல்லுகிறாள். ஆனால், அந்த அம்மணிபாயி என்பவள் தனக்கு யாதொன்றும் தெரியாதென்றும், தான் கோலாப்பூருக்கே போனதில்லை என்றும், இவர்கள் தன் வீட்டுக்கு வரவில்லை என்றும், தான் அரண்மனையில் பெரிய ராணியிடம் வேலை பார்ப்பவள் என்றும் சொல்லி, அந்த வேலைக்காரியைத் தனக்குத் தெரியவே தெரியாதென்று ஒரே உறுதியாகச் சொல்லி மறுத்துவிட்டாள். விஷயம் நடந்திருப்பதைப் பார்த்தால், எனக்கு அந்த அம்மணிபாயியின் மேல் பூராவும் சந்தேகம் உண்டாகிறது. ஷண்முகவடிவு இன்னமும் அவளுடைய வசத்திலேதான் எங்கேயாவது இருப்பாளென்று நினைக்கிறேன்’ என்றார்.

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர், ‘ஓகோ நீங்கள் வேலைக் காரியை அழைத்துக்கொண்டு அவளிடம் போயிருந்தீர்களா! அப்படியா சங்கதி அந்த அம்மணிபாயி சாதாரண மனுஷியா அவள் பெரிய மலைமுழுங்கி ஆசாமியாயிற்றே. அவள் உங்களிடமெல்லாம் பேச்சில் அகப்பட்டுக் கொள்வாளா? ஷண்முகவடிவும் நானும் நேரில் போய் அவளிடம் பேசிய காலத்திலேயே அவள் எங்களையெல்லாம் பேச்சில் தூக்கி எறிந்துவிட்டாளே. அவளுக்கு இந்த வேலைக்காரி ஒரு பொருட்டா’ என்றார்.

நீலமேகம் பிள்ளை, ‘ஆனால், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஷண்முகவடிவை நீங்கள் நேரில் பார்த்துப் பழகி இருக்கிறீர்கள்போல் இருக்கிறீர்கள்! நீங்கள் எப்போது பார்த்தீர்கள்? அதன்பிறகு அவள் எங்கே போனாள்? எல்லா