பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 209 முடியாமல் போகும். பதிவிரதா சிரோன்மணியான ஷண்முக வடிவின் வதைக்கு நீரே உத்தரவாதி ஆவீரென்பதைப் பற்றி கொஞ்சமும் ஐயமில்லை. ஷண்முகவடிவின் விஷயம் நிரம்பவும் அவசரமானது. தலைபோகக் கூடியது. ஆகையால், அது விஷயத்தில் நீர் கொஞ்சமும் அசட்டையாக இருந்தால், இனி நீர் அவளைக் காண்பது அரிது. அவள் உமது விஷயத்தில் கொண்டிருக்கும் சந்தேகத்தை எப்படி நீக்குகிறதென்று கவலை உமக்கிருக்கலாம். கோலாப்பூரிலிருந்து ஷண்முகவடிவை அழைத்துவந்து ஸ்திரீயோக்கியமானவளென்று அவள் கடைசி வரையில் நம்பி இருந்திருக்கலாம். ஆனால், மருங்காபுரி -- ஜெமீந்த்ாரிடம் அவள் கொண்டுபோய் விடப்பட்டபிறகு, அவர் தமது துராக்கிருதத்தை நடத்த முயன்று இருப்பார். ஆதலால், அப்போது அவளுக்கு உண்மை விளங்கிப் போயிருக்கும். தன்னை கோலாப்பூரிலிருந்து அழைத்து வந்தவள் நிரம்பவும் மோசக்காரி என்பதையும் ஷண்முகவடிவு உணர்ந்து கொண்டிருப்பாள். அவள் சம்பந்தப்பட்டிருந்த வரையில் கோலாப்பூரில் நடந்த விஷயங்களும் பொய்யாகத் தான் இருக்க வேண்டும் என்று அவள் சந்தேகப்பட்டுக் கொண்டுதான் இருப்பாள். ஆகையால், நீர் அவளைக் கண்டுபிடித்து உண்மையில் நடந்த விருத்தாந்தங்களை எல்லாம் தெரிவித்தால், அவள் அதை அவசியம் நம்புவாள் என்றே நினைக்கிறேன். ஆகையால், அது விஷயத்தில் உமக்கு யாதொரு யோசனையும் வேண்டியதில்லை. நீர் தனம், அம்மாளு முதலியவர்களோடு பிரயாணம் செய்தகாலத்தில் பெட்டி வண்டிக்குள் ரகசியமாக நடந்த காரியங்களெல்லாம் எனக்குத் தெரியும்.அதன்பிறகு அந்தப்பெண்கள் மூவரும் தனித்தனியே வந்து உம்மிடம் செய்த ஸாகசங்களெல்லாம் எனக்குத் தெரியும். இவைகளை எல்லாம் நான் தெரிந்துகொண்டு எழுதுவதிலிருந்து நான் எதிரிகளின் கட்சியைச் சேர்ந்தவனென்று நீர் நினைத்துவிடக் கூடாது. எதிர் கட்சிக்காரர்களைச் சேர்ந்த முக்கியமான இருவர் ரகசியமாக இந்த விஷயங்களைப் பேசிக்