பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பூர்ணசந்திரோதயம் - 5 காணப்படவில்லை. ஆகையால், இவள் சொன்னதெல்லாம் உண்மையென்றே நாம் ஒப்புக் கொள்ளக் கடமைப்பட்டி ருக்கிறோம். இந்த அம்மாள் சொன்னதெல்லாம் சரியல்ல வென்றால், இவர் வேறுவிதமாகக் கொல்லப்பட்டார் என்றும் நாம் தீர்மானிப்பதற்கு இங்கே யாதொரு சாதனமும் இல்லை. ஆகையால், இந்த அம்சங்களை எல்லாம் கருதி நாங்கள் இந்த அம்மாளுக்கு அனுகூலமாக முடிவு செய்தோம். இப்படி உருக்குலைந்து கிடக்கும் பிரேதத்தை வைத்துக்கொண்டு நாங்கள் செய்யக் கூடியது வேறொன்றுமில்லை. எங்களுடைய சோதனை உங்களுக்குத் திருப்திகரமாக இல்லாவிட்டால், நீங்கள் வேறே யாரைக் கொண்டாவது மறுபடி சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். அல்லது, இந்த அம்மாள் குற்றவாளி என்பதை அறிந்த வேறு சாட்சிகள் இருந்தால், அவர்களுடைய உதவியைக் கொண்டு நீங்கள் இந்த வழக்கை நீதி ஸ்தலத்தில் நிறைவேற்றிக் கொள்ளலாம்’ என்றார்.

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் புன்னகை செய்து, “வேறே வைத்தியர்கள் வந்து பார்த்தால், அவர்கள் மாத்திரம் உண்மையைக் கண்டுபிடிக்கப் போகிறார்களா? ஒருநாளும் இல்லை. நீங்கள் சொன்னதைத்தான் அவர்களும் சொல்லப் போகிறார்கள். ஆகையால், நீங்கள் சொன்னதையே நாங்கள் ஒப்புக்கொள்ளுகிறோம். இதுவரையில் நாம் பார்த்த குறிகளெல்லாம் இந்த அம்மாள் சொன்னதற்கு அனுசரணை யாகவே இருந்தன. ஆகையால், இந்த அம்மாள் குற்றமற்றவள் என்று தீர்மானித்து வீட்டுக்கு அனுப்பி விட்டோம். இனி இந்த விஷயத்தில் அந்த அம்மாளுக்கு விரோதமாக ஏதேனும் குறியோ, அல்லது சாட்சியோ கிடைக்குமானால், மறுபடியும் நாம் இந்த அம்மாவின் மேல் வழக்குத் தொடர, அதிக நேரம் பிடிக்காது. ஆகையால், அதுவரையில் இந்தத் தீர்மானமே முடிவான தீர்மானமாக இருக்கட்டும்” என்று கூறினார்.

அதன்பிறகு பிரேதத்தின் மாம்சமெல்லாம் துப்பட்டியில்