பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 is பூர்ணசந்திரோதயம் - 5 அவனுக்குக் கமலத்தைப் பற்றிய நினைவு உண்டாயிற்று. அவன் பூனாவுக்குப் போவதற்குள் அவளை ஒரு தரம் நேரில் பார்த்தவன். ஆதலால், அவள் சோமசுந்தரம் பிள்ளையென்ற ஒரு தனிகரிடம் அபிமானபுத்திரியாக இருக்கிறாளென்ற விவரத்தை நன்றாக அறிந்தவன் ஆதலாலும், அவளே ஒரு கால் தனது அத்தை முதலியோரைத் திருவாரூரிலிருந்து தஞ்சைக்கு அழைத்துக்கொண்டாளோ என்றும், அவளது விருப்பத்திற்கு இணங்க சோமசுந்தரம் பிள்ளை என்பவர் அந்தப் பங்களாவை விற்கிறாரோ என்றும் ஒர் எண்ணம் உண்டாயிற்று. அதுவுமன்றி, தனக்குக் கடிதமெழுதி அனுப்பிய ரகசியமான மனிதர்ஷண்முக வடிவு காணாமல் போன விஷயத்தைக் கமலத்துக்கும் அறிவித்து இருப்பாரோ என்ற நினைவும், அதை அறிந்த பிறகே கமலம் தனது அத்தை முதலியோரை வரவழைத்துக் கொண்டி ருப்பாளோ என்ற நினைவும் உண்டாயிற்று. தனக்கு எழுதப்பட்ட கடிதம் பல நாட்களுக்கு முன்னர் எழுதப்பட்டது ஆகையால் அதன்பிறகு கமலத்தின் முயற்சியால் ஒருவேளை ஷண்முகவடிவு அகப்பட்டு, அவளும் அக்காளிடமே போய்ச் சேர்ந்திருப்பாளோ என்ற யோசனையும் தோன்றியது. தெய்வச் செயலாக ஷண்முகவடிவு தனது அக்காளிடம் போய்ச் சேர்ந்திருக்கக் கூடாதா என்ற விருப்பமும், ஐயமும் எழுந்து அவனது மனதைத் துண்டின. ஆதலால், தான் உடனே கமலத்தின் ஜாகையை அடைந்து அவளைக் காண வேண்டு மென்று அவன் தீர்மானித்துக் கொண்டான். ஷண்முகவடிவு அவளிடம் போயிராவிட்டாலும் தான் சகலமான வரலாறு களையும் அவளிடம் வெளியிட்டு, அவளது அபிப் பிரா யத்தையும் கலந்து அதற்கு மேல் தான் ஷண்முக வடிவைத் தேடலாமென்று தீர்மானித்துக் கொண்ட நமது யெளவனப் புருஷன் உடனே புறப்பட்டு அதற்கு முன் தான் கமலத்தைச் சந்தித்த மாளிகையை அடைந்தான்.

ஆனால், அவன் போன இடத்திலெல்லாம் ஏமாற்றமும் சஞ்சலமுமே எதிர்கொண்டு நின்றது. அந்த மாளிகையின்