பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 295 நிதிக்குவியல்களாகிய என் பெண்கள் இருவரையும் நான் திரும்பி அடைந்தேன். ஆகையால், இந்த விஷயத்தைப் பற்றி நாம் விசனிக்கவாவது லஜ்ஜையுறவாவது நியாயமில்லை. ஆனால், ஒரு விஷயம் மாத்திரம் நான் கேட்டுக்கொள்ளுகிறேன். உங்கள் தாய் விஷயத்தில் ஆதியில் நான் செய்த பெரிய தவறை மாத்திரம் மனசில் வைக்காமல் நீயும், நீலமேகம் பிள்ளை யும் எல்லாவற்றையும் மறந்து, என்னிடம் மாறாத பிரியமுடைய வர்களாக இருக்கவேண்டும். உங்கள் இருவரையும் இதுவரை யில் காப்பாற்றக் கடமைப்பட்டவனாகிய நான் அதை நிறைவேற்றக் கொடுத்து வைக்காத துர்ப்பாக்கியனானேன். ஆனாலும், அதை நான் வட்டியும் முதலுமாக இப்போது பூர்த்தி செய்யத் தயாராக இருக்கிறேன். உங்கள் தாயாரைப் பற்றிய விவரம் எதையும் வெளியிடாமல் நீங்கள் இருவரும் என் சொந்தக் குமாரிகள் என்ற செய்தியை நான் இப்போதே பகிரங்கப்படுத்தி உங்கள் இருவரையும் ராஜகுமாரத்திகளின் ஸ்தானத்தில் வைக்கிறேன். இனி எந்த விஷயத்தைப் பற்றியும் உங்களுக்கு எள்ளளவும் கவலையே தேவையில்லை. ஆனால், ஒரு சந்தேகம் உன்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. திருவாரூரிலிருந்த நீ இந்த ஊருக்கு எப்படி வந்தாய்? வந்த இடத்தில் பூர்ணசந்திரோதயமென்ற பெயரை வைத்துக் கொண்டு இந்த ஊரில் என்ன உத்தேசத்தோடு தங்கினாய் சில மோசக் காரர்களின் சதியாலோசனையில் அகப்பட்டு ஏமாறிப்போனதாகச் சொன்னாயே. அவர்கள் யார்? அவர்கள் என்ன மோசம் செய்தார்கள்? இந்த விவரங்களைச்

சொல்’ என்றார்.

அவரது வாத்சல்யம் ததும்பிய உருக்கமான சொல்லைக் கேட்டபூர்ணசந்திரோதயம் சிறிதளவுதுணிவு அடைந்தவளாய்த் தானும் நீலலோசனி அம்மாளும் ஷண்முகவடிவும் திருவாரூரி லிருந்த விவரத்தையும், ஷண்முகவடிவின் குண விசேஷங் களையும், திடீரென்று நீலலோசனியம்மாள் பrவாத நோய்