பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகமும் வெகு ரசமாகவும், படிக்கப் படிக்க மேலே என்ன நடக்கிறதோவென்னும் ஆவலைக் கிளப்பிவிடக் கூடியதாகவும் இருக்கிறது. தன்னை மணஞ்செய்து கொள்ளவிருந்த கண்ணபிரான் முதலியாருக்கு எதிர்பாராதவிதமாக ஆபத்து ஏற்பட்டும், அவரையே மணப்பதென்ற உறுதியுடன் கோகிலாம்பாள் அவரைப் பார்க்கச் சிறைக்குச் சென்றதும், வழியில் போலீஸ் இன்ஸ்பெக்ட ருடைய சூழ்ச்சியால் அவர் வசப்பட்டு, அவருடைய வீட்டிலிருந்து வெகு சாமர்த்தியமாகத் தப்பி வருவதும், பட்ட காலிலே படும் கெட்ட குடிய்ே கெடும் என்பதுபோல் வண்டிக்காரனுடைய மோசத்தால் மற்றொரு ஆபத்தில் அவள் சிக்குவதும், திக்கற்றவருக்குத் தெய்வமே துணை யென்னும் நீதிவாக்கியம் பொய்த்துப் போகாமல், அவளிடம் மோகாவேசங் கொண்டிருந்த ஒருவர் அவளைப் பரம ஆபத்திலிருந்து மீட்டுவிடுவதும், ஸ்திரீகள் தனித்து வெளியே செல்லக்கூடாதென்பதையும், குற்றங்களை விளக்குவதற்காக ஏற்பட்டிருக்கும் போலீஸ்காரர்களிற் சிலரே தவறான வழியில் நாட்டமுடையவர்களாக இருப்பதையும் அறிவுறுத்துகின்றன. திருவாங்கூர் திவானாக இருந்தவருடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கதாசிரியர் செய்திருக்கும் வர்ணனையானது ஸ்திரீ புருஷர்களுக்குள் சகஜமாக இருந்துவரவேண்டிய அன்யோன்ய பாவத்தை அறிவுறுத்துவதாக இருக்கிறது. அரபிக் கதைகளில் பாக்ஷா மாறுவேடத்துடன் நகர் சோதனை செய்து வருவதுபோல் இந்த திவானும் தமது பெண்டாட்டியுடன் வெளியே சென்றிருந்த சமயத்தில் ஒரு உத்தமிக்கு நேர்ந்த இடுக்கனைக் கண்டு கசிந்துருகி, அவளுடைய வரலாற்றை விசாரித்து அவளுக்கு நியாயம் வழங்கியது சில போலீஸ்காரர்கள் சொந்த நன்மையை உத்தேசித்து எத்தகைய தீக்காரியங்களிலும் ஈடுபட்டு விடலாமென்பதை நிரூபணம் செய்து அவர்கள் விடும் சாகூஷியங்களில் அதிகமாக நம்பிக்கை வைத்து விடக் கூடாதென்பதை நீதிபதிகளுக்கு வலியுறுத்துவதாகவிருக்கிறது. சதிபதிகள் எத்துணை அன்யோன்ய பாவத்துடனிருந்தபோதிலும் உலகில் பலவித வதந்திகள் பரவி வருவது இக்கலியுகத்தில் சர்வசாதாரணமாக இருந்துவருவதை திவான் சாகேப் உலக ஆசையை வெறுக்க நேர்ந்த சந்தர்ப்பங்கள் நிரூபணம் செய்கின்றன. இந்த நவினகத்தின் இதர விசேஷங்களை விரித்து உரைக்கின் வளருமாதலால் இம்மட்டோடு நிறுத்திக் கொள்ளுகிறோம். இப்புத்தகத்தைக் கையிலெடுத்தவர்கள் இதிலுள்ள 376 பக்கங்களையும் படிக்காமல் கீழே வைக்கமாட்டார்களென்பது மிகையாகாது. உத்தமமான தர்மங்களைப் பசுமரத்தானிபோல் படிப்பவர் மனத்தில் பதியவைக்கக்கூடிய இத்தகைய சிறந்த நவீனகங்களை வெளி யிட்டுவரும் ரீமான் துரைசாமி ஐயங்காருக்குத் தமிழ்நாடு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது. இது போன்ற இன்னும் பல நவீனங்களை ரீமான் துரைசாமி ஐயங்கார் வெளியிட்டு வருவதற்கு வேண்டிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தமிழ் மக்கள் அளிப்பார் களென்று நம்புகிறோம்.