பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 35 அனுப்பிவிட்டேன். அவர்களுக்கு ஆறு மாதகாலத்திற்கு ஒருமுறை ஆயிரம் ரூபாய் செட்டியார் பாங்கியின் மூலமாக அனுப்பிவருகிறேன். தங்களுக்கு இன்னார் பணம் அனுப்புகிறார் என்பது தெரியாமலிருக்கும் பொருட்டு யாரோ சோமசுந்தரம் பிள்ளையென்ற ஒருவர் அனுப்புவதாக நான் சொல்லி வைத்திருக்கிறேன். கமலம், ஷண்முகவடிவு என்ற பெயருடைய அந்தப்பெண்கள் தங்கள் தகப்பனார் இறந்து போய் விட்டதாகவும் தங்களுடைய அத்தையிடம் இருந்து வளர்ந்து வருவதாகவும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வீட்டு விலாசத்தில் சோமசுந்தரம்பிள்ளை என்ற பெயருக்குக் கடிதங்கள் வருமானால், மற்றோர் இடத்தில் கொடுக்கும் படி நான் தபால்காரனிடம் சொல்லி ஏற்பாடு செய்திருக்கிறேன். இப்போது அந்த அத்தை பrவாத நோய் கொண்டு படுத்திருக்கிறாள். பெண்களிரண்டும் பக்குவகாலம் அடைந்து கலியாணத்துக்குத் தயாராக இருக்கிறார்கள். நாம் அவர்களை எங்கேயாவது நல்ல இடத்தில் கலியாணம் செய்துகொடுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லக்ஷம் ரூபாய் ஸ்ரீதனமாகக் கொடுத்துவிட வேண்டும். நான் தெய்வச் செயலாக இறந்துவிட்டாலும், என் குமாரன் இந்தக் கடமையை நடத்தத் தவறக்கூடாது. அவர்கள் தன்னுடைய சொந்தத் தாயின் வயிற்றில் பிறந்த சகோதரிகள் என்ற முறமையை நீலமேகன் ஒருநாளும் மறக்கக் கூடாது. -

இது நிற்க, நான் இத்தனை வருஷகாலம் மறுபடி கலியாணம் செய்துகொள்ளாமலேயே இருந்து என் மன உறுதியை நிறைவேற்றியே வந்தேன். ஆனாலும், இத்தனை வருஷ காலத்திற்குப் பிறகு அந்த உறுதிக்குப் பங்கம் வந்துவிட்டது. மருங்காபுரி ஜெமீந்தாருடைய தம்பி மகளான லீலாவதி என்ற பெண் அழகு சாயல் முதலிய சகலமான விஷயங்களிலும் என் சம்சாரத்தைப்போலவே இருக்கிறாள். ஆகையால், அவளைக் கண்ட பிறகு என் மனம் மாறிப் போய்விட்டது. அவளும்