பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பூர்ணசந்திரோதயம் - 5 பெண்கள் இருவரும் எங்கே போயிருப்பார்கள் என்பதும் தெரியவில்லையே’ என்று பெரிதும் ஆவலோடு வினவினான்.

அதைக் கேட்ட ஜெமீந்தார் வேலைக்காரர்களுக்கு எந்த விஷயமும் தெரியாதென்று உடனே யூகித்தறிந்து கொண்டார். ஷண்முக வடிவின் விஷயத்தில் தாங்கள் செய்த சதியாலோ சனையை வெளியிடுவது யுசிதமானதல்லவென்று அவர் தமக்குள் தீர்மானித்துக் கொண்டவராய், ‘அப்பா! கோவிந்தசாமீ. நேற்று நடந்த சங்கதியை நான் என்னவென்று வெளியிடுவேன்! கீழே படுத்திருந்த உங்களுக்கெல்லாம் தெரியாமல் இங்கே அவ்வளவு பெரிய காரியம் நடந்திருக்கிறது! நான், லீலாவதி, புதிதாக வந்த பெண் ஆகிய மூவரும் வெல்வெட்டுமாடத்தில் படுத்துத்துங்கிக்கொண்டிருக்கையில், எப்படியோ திருடர்கள் உள்ளே வந்திருக்கிறார்களே! அயர்ந்து நான்துங்கிக் கொண்டிருக்கையில் யாரோ ஒரு முரட்டு மனிதன் வந்து என் உடம்பிலிருந்த சட்டைப்பையில் கையைவிட்டு இரும்புப் பெட்டியின் திறவுகோலை எடுக்க முயற்சித்தான். நான் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு எழுந்து கூச்சலிடவும், அவனை எதிர்க்கவும் ஆரம்பித்தேன். அவன் என்னைப் பலாத்காரமாகப் பிடித்துத்துக்கிக்கொண்டுபோய் விசைவைத்த நாற்காலியொன்றில் போட்டுவிட்டான்; அதன்பிறகு நான் வெகுநேரம் வரையில் கூச்சலிட்டுப் பார்த்தேன். யாரும் வரவில்லை. அந்த நாற்காலியிலிருந்து நான் வெகுநேரம் தத்தளித்தேன். பிறகு என்னுடைய அறிவுமயங்கி போய் விட்டது. அதன்பிறகு என்ன நடந்ததென்பது எனக்கு ஞாபகமில்லை. இப்போது விழித்தவுடன் உங்களைப் பார்க்கிறேன். நீங்கள் சொல்லும் விவரங்களை பார்த்தால், திருடர்கள் இரும்புப் பெட்டியைத் திறந்து, அதற்குள்ளிருந்த திரவியங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு இரண்டு பெண்களையும் அபகரித்துக்கொண்டு வெளிக்கதவையும் பூட்டி விட்டுப்போயிருக்க வேண்டுமென்பது நிச்சயமாகத் தெரிகிறது.