பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பூர்ணசந்திரோதயம் - 5 பாடுபட்டிருக்கிறேன். உமக்கு வயசு தொண்ணுறுக்குமேல் ஆகிவிட்டது. பல்லும் போய் பவிஷ-ம் போய்விட்டது. தட்டிவிட்டால் எட்டிடத்தில் குட்டிக்கரணம் போடக்கூடிய நிலைமையிலுள்ள குடுகுடு கிழவரான நீர் யெளவனக் குமரி களாகப் பார்த்துப் பிடித்து இந்த இடத்தில் கொண்டு வந்து வைத்து விசைவைத்த நாற்காலியில் மாட்டி பலாத்காரம் செய்கிறீர்; யோசித்துப் பார்த்தால், நீங்கள் செய்யாத அக்கிரமம் ஒன்று கூட பாக்கியில்லை என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட துன்மார்க்கரான நீங்கள் என்னைப் பார்த்துத் திருடனென்றும் நாயென்றும் சொல்ல, உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?” என்றான்.

அதைக்கேட்ட ஜெமீந்தார் வெட்கிப்போய் உடனே தணிவடைந்து நயமாகப் பேசத்தொடங்கி, ‘அப்பா கோபித்துக் கொள்ளாதே; தூக்கக் கலக்கத்தில் நீ இன்னான் என்பதை அறியாமல் பேசிவிட்டேன். நீ என் மருமகன் விஷயத்தில் எத்தனையோ உதவிகள் செய்தவன் என்று என் மகள் சொல்ல நான் கேள்வியுற்றிருக்கிறேன். நேற்றைய தினம் காலையில் நீ இங்கே வந்து என் மகளிடம் பேசிய விவரத்தையும் அவள் என்னிடம் இன்று சாயுங்காலந்தான் வெளியிட்டாள். நேற்று ராத்திரி இங்கே வந்து என்னுடைய திரவியங்களையும் இந்தப்பெண்ணையும் எடுத்துப்போனதும் நீதான் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். இதுவரையில் எங்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்த மனிதனான நீயே கடைசியில் எங்கள் விஷயத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் செய்வது கொஞ்சமும் நியாயமா என்பதை நீயே எண்ணிப் பார். என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேவையான எவ்வளவோ பொருள் கொடுத்திருப்பேன். இப்போதும் ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. நடந்தது நடந்துவிட்டது. உன்னிடத்தில் நான் வர்மம் பாராட்டமாட்டேன். இந்த ஊர் இளவரசருக்கும் எனக்கும் அந்தரங்கமான சிநேகிதமுண்டு. நான் எந்த விஷயம்