பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பூர்ணசந்திரோதயம் -5பெயரையும் அடையாளங்களையும் நீர் இந்த ஊர் சிறைச் சாலையில் அடைபட்டிருக்கும் விவரத்தையும் சொல்லி, நான் எப்படியாவது உம்மை விடுவித்து அழைத்துக்கொண்டு வரவேண்டுமென்று என்னிடம் கேட்டுக் கொண்டார். அவர் தக்க பெரிய மனிதர். ஆகையால் அவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நான் என்னுடைய ஆட்களில் சிலரை அழைத்துக் கொண்டு இங்கே வந்தேன். வந்து பல மனிதர்களிடம் தந்திரமாக விசாரணை செய்து, நீர் சிறைச்சாலையில் அடைபட்டிருக்கிறது உண்மைதான் என்று தெரிந்துகொண்டு உம்மிடம் வரும் தாதியைப் பிடித்து அவளுக்கு ஏராளமான பணம் கொடுத்து அவளுடைய சிநேகத்தைச் சம்பாதித்துக் கொண்டேன். பிறகு அவள் மூலமாக நான் செய்த காரியங்களெல்லாம் உனக்குத் தெரிந்தவைகளே. இவ்வளவுதான் என்னுடைய வரலாறு’ என்றான்.

கலியான:- உம்மை அனுப்பிய மனிதருடைய பெயர் என்ன?

பஞ்சண்ணா:- அவர் யார் என்பதை நான் உம்மிடம் வெளியிடக் கூடாதென்று அவர் கண்டித்துச் சொல்லியிருக் கிறார்; ஆகையால், அதை மாத்திரம் நான் சொல்வதற்கில்லை.

கலியாண:- ஐயா! நீர் சொல்வது நிரம்பவும் விநோதமாக இருக்கிறதே! என் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டு நிரம்பவும் அக்கறையாக உம்மை இங்கே அனுப்பி வைத்த மனிதர் தம்முடைய பெயரை எனக்குத் தெரியாமல் மறைத்துக்கொள்ள வேண்டிய காரணம் என்ன என்பது தெரியவில்லையே! நீர்சொல்வதைப் பார்த்தால், இந்தக்காரியம் என்னிடமுள்ள பிரியத்தினால், எனக்கு அனுகூலம் செய்ய வேண்டுமென்று செய்யப்பட்டதாகத் தோன்றவில்லையே! உம்மை இங்கே அனுப்பிய மனிதர்களும், ஒருவேளை, இந்தப் பெண்களோடு சம்பந்தப்பட்டவராக இருக்கலாமோ? இங்கே இவர்களால் என்மனசைமாற்ற முடியவில்லையென்று கண்டு,