பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அன்பு

15


பெருக்கும் தோட்டி அவன் வடிவம். நாதியற்ற தொழு நோயன் அவன் வடிவம். அவர்களுக்கு அன்பு செய். அதுவே கடவுள் வழிபாடு.

அன்பு செய்தால் அல்லல் தீரும். அல்லல் தீர்ந்தால் அமைதி பெருகும். அமைதி பெருகினால் அதுவே பேரின்பம்.