பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரி விளையாட்டு

29


சிறுமியவள் அந்தச்
சிறு வீட்டின் உள்ளிருந்து
உரைததாள் ஒரு வார்த்தை;
"ஓடிவா, கஞ்சி குடி ,

மண் வெட்டப் போகணுமாம்
பண்ணையார் ஏசுகிறார்.
இன்பமுள்ள விளையாட்டும்
இதுதானோ, வேறிலையோ?

வாழ்க்கை தனிற் புகுந்து
வல்லடிமை தான செய்து
பாழ்த்த வயிற்றினுக்கே
பசி தீர்த்து மாயுமுனர்

கள்ளமறி யாக்குழந்தைக்
கற்பனையில் ஆண்டானாய்
உள்ளமதில் எண்ணியவர்
உவகையுற லாகாதோ?

துன்பத்திலே தோன்றித்
தொழும்பே வடிவானோர்க்
கின்ப விளையாட்டும்
இல்லையோ இவ்வுலகில் ?