பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னேற்றம்

சென்ற நூற்றாண்டிலே மனித சமூகம் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் ஒரு நூல் எழுதினர். 'மகத்தான முன்னேற்றங்கள் ஏற்பட்ட நூற்றாண்டு' என்று அந்த நூலுக்குப் பெயர். அந்த மனிதர் வெகு சிரமப்பட்டுப் போன நூற்றாண்டிலே உண்டான விஞ்ஞான வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, கலை வளர்ச்சி என்றிப்படி எல்லா வற்றையும் குறித்துப் பக்கம் பக்கமாக வரைந்து தள்ளி, அந்த முன்னேற்றத்தின் மகத்தான தன்மையை நிலை நாட்ட முயன்றிருக்கிறார்.

அவர் எடுத்துக்கொண்டிருக்கும் சிரமத்தைக் கண்டு பெர்னாட்ஷாவுக்கு மனமிளகிப் போய்விட்டதாம். "ஐயோ! பாவம் அந்த மனிதன் அத்தனை துன்பப்பட்டிருக்க வேண்டிய தேவையே இல்லையே! மனித சமூகத்தின் முன்னேற்றத்தை வெகு எளிதாக ஒரே வாக்கியத்தில் கூறி நிலைநாட்டி விடலாமே' என்று அவர் அங்கலாய்த்தாராம். மனித இனத்தின் முன்னேற்றத்தைப் பற்றி அவர் சுருக்கமாகக் கூறுவதாவது: "காட்டு மிராண்டியாகத் திரிந்த பழங்கால மனிதன் பிறரைக் கொல்ல நச்சுத்தோய்ந்த அம்பை ஏவினான்;" நாம் இன்று நச்சு வாயுவை ஏவுகிறோம் ; இதுதான் நமது முன்னேற்றம்’ என்கிறார் அவர்.

கொஞ்சம் எண்ணிப் பார்க்கப் போனால் பெர்னாட்ஷா சொல்லுவது ஒரு வகையில் உண்மையாகத்தான் இருக்கிறது. பழங்கால மனிதனைவிட நாம் எந்த