பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பூவின் சிரிப்பு



கத்தையே வளைத்துக்கொள்ளப் படை யெடுப்பு நடக்குமோ? தென்னைமரங்கள் இருளின் கொடிமரங்களாய் விட்டன.

பிறைமகளுக்கு இப்பொழுது முன்னைவிட மிகுதியான ஒளி வந்து விட்டது. மேற்கு மலைத் தொடர் அந்தச் சுடர் வளைவைப் பார்த்துப் பார்த்து நிமிர்ந்து படுத்திருக்கிறது. தன்னிடம் பிறைமதியாள் வரவேண்டு மென்று தவங்கிடக்கின்றது.

அதன் கரு நீல மேனியிலே அந்த மின்னல் துண்டு ஒரு கணம் தங்குகிறது. ஆகா, திருமாலின் மார்பிலே களித்து மறைகின்றாள் திருமகள்!

நான் அந்தக் காட்சியை இன்று கண்டுகொண்டேன்.