பக்கம்:பூவும் கனியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



இந்தக் குழந்தைக ளெல்லாம் எவ்வளவு மகிழ்சி சியாக ஆடினார்கள்! நான் முன்பே சொன்னது போல இவர்கள் பூக்கள். கடினமாகத் தொட்டால் வாடிவிடுவார்கள்; கொஞ்சம் கோபமாகச் சொன்னால் வாடிவிடுவார்கள். ஆகையால் கோபமாகக் சொல்லாதீர்கள். பள்ளிக்கூடத்திற்கும் மகிழ்ச்சியாக வரும்படி செய்யுங்கள். பள்ளிக்கூடத்திலே மலர்ந்த முகத்தோடு இருக்கும்படி செய்யுங்கள்.

இன்றுபோல் என்றும்

இன்றைக்கு ஒவ்வொருவரும் - குழந்தைகளும் பெரியவர்களும்-உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் இருக்கிறீர்கள். உங்களால் இன்றைக்குச் செய்ய முடிந்தது நாள்தோறும் செய்யமுடியாதா? இந்த முயற்சி, இந்த ஆர்வம், இந்த உற்சாகம், இந்த அன்பு ஆகியவற்றைப் பள்ளிக்கூடத்தில் செலுத்துங்கள். எனக்கு அதுதான் மனநிறைவு கொடுக்கும். இதைக் காணவும் மன நிறைவு ஏற்படுகின்றது. மேலும் மிகுதியாக மனநிறைவு அளிப்பது அதுதான்.

நான் உங்களைக் கேட்டுக்கொள்வ தெல்லாம் உங்கள் பள்ளிக்கூடத்தை எப்போதும் ஒட்டடை இல்லாத பள்ளிக்கூடமாக, " அழுக்கில்லாத பள்ளிக்கூடமாக, அணி செய்யப்பட்ட பள்ளிக்கூடமாக வைத்துக்கொள்ளுங்கள் என்பதே. குழந்தை

— 8 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/14&oldid=495183" இலிருந்து மீள்விக்கப்பட்டது