இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
என்பது பொதுமறை. அவ்வழி தம்முடைய அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் என்னையோ, என் உடன்பிறந்தோர் களையோ கல்வியில் பாதிக்காத வகையில் கட்டிக்காத்து, நற் கல்வி பெறச்செய்த என் தந்தையாருக்கு நன்றியறிதலோடும், வணக்கத்தோடும் இச் சிறு நூலைக் காணிக்கை யாக்குகிறேன்.
நெ. து. சுந்தரவடிவேலு