உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூ மணம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 32 உள்ளே-திரைப்படங்களில் பார்க்கிருேமல்லவா அதே போலப் பகட்டும் பளபளப்புமான முறையில் நிர்மாணிக்கப் பட்டிருந்த அந்தப் பெரிய அறையில் நாகரிக உடை உடுத்திக்கொண்டு சுழல் நாற்காலியில் சுற்றிய வண்ணம் சிந்தனே வசப்பட்டிருந்தார் டைரக்டர். உதட்டுடன் உதடாக உறவு பேசிக் கொண்டிருந்த பளுமா’ வின் தேய் வுக்குக் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. புகைச்சுருள் விண்ணேச் சாட வில்லை; மண்ணச் சாடவில்லை; அவரது கண்களேச் சாடிக்கொண்டிருந்தது. அவர் கண்கள் தேக்கி வைத்திருந்த நீர்ப்பெருக்கை நெட்டித் தள்ளின. அவர் சிந்தையுங்கூட அப்படிப்பட்ட நிலையில்தான் இருந்தது. இல்லையென்ருல் இதழ் பிரித்து இதழ் சேருவதற்குள் அவர் கண்கள் ஏன் அப்படிக் கலங்கி அழவேண்டும் ? அவர் நெஞ்சம் ஏன் அப்படிப் பெருமூச்சு விட்டுத் தேம்ப வேண்டும்? ஒவ்வொரு தனிமனிதன் சொந்த வாழ்வுமே ஒரு வாழ்க்கைச் சரித்திரம் போலத்தான். அப்படித்தான் அமைந்து விட்டது அந்த டைரக்டரின் வாழ்க்கையும் ! அவர் வாழ்க்கை அப்படி; சரிதம் அப்படி. வாழ்க்கைச் சரித்திரம் அது இறந்த காலமும் நிகழ்காலமும் கூட்டணி யாகித் தீட்டிய துயரக் கதை அது. பாசமும் பிணேப்பும் துண்டிக்கப்பட, அதன் விளேவில் சொட்டிய ரத்தக் கண்ணிர் பாடிய துன்பக்காவியம் அது. உயிரும் உயிர்ப்பு மாகப் பூண்டொழுகிய இளங்காதலர்களது தாம்பத்தியம் பிளவுகாண, அந்தப் பிளவு சொல்லிய சோகக்கதையும் அதுதான். - ஆனந்தமயமான அமுதச் சூழ்நிலையிலே, மனங் குமையும் வேதனைப் புலம்பல். விந்தைதான்! நினைவு அலை மறுபடியும் மனக்கரையைச் சீறித் தாக்கியது. டைரக்டர் மேஜை டிராயரை இழுத்து உள்ளேயிருந்து எடுத்த படத்தை உள்ளங்கையில் வைத்துப் பார்த்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/138&oldid=835388" இலிருந்து மீள்விக்கப்பட்டது