§ ஐக்கியப்பட்டனர். நேசம் வளர்ந்தது; அன்பு பெருகிற்று; பாசம் முழுமை பெற்றது. ‘அண்ணுவிடம் நான் தேறிவிட்டதைப் பற்றிச் சொன்னுல் அவர் எவ்வளவு பெருமைப்பட்டுப் போவார்!’ என்று மனதிற்குள் எண்ணிப் பார்த்த ராஜேந்திரனுக்கு ஆனந்தம் கரை காட்டியது. ஆனந்தத்தில் ஒருவன் இளைஞன் ஆகிருன். ராஜேந்திரன் கணத்தில் இளைஞனுள் இளைஞனாக மாறிவிட்டான்-மாற்றப்பட்டான். ராஜேந்திரன் உள்கட்டிற்குள் நுழைந்த பொழுது மங்களம் அவனுக்கு எதிர்ப்பட்டு வந்தாள். ஆனந்தனேக் கானன் விழிகளே உருள விட்டான். அவன் இல்லை. அவள் இருந்தாள். அண்ணி, நான் தேறிவிட்டேன். ' * நீ பாசானதைப் பேப்பரிலே பார்த்து விட்டுத்தானே உன்னிடம் என் வாழ்த்தைத் தெரிவிக்க ஓடி வந்தேன்.’’ ரொம்ப சந்தோஷம் அண்ணி. ஆமாம். அண்ணு எங்கே??? அவர் ஆபீஸ் அலுவலாகக் காலேயில் திருச்சிக்குப் புறப்பட்டுப் போனர். இந்நேரம் பேப்பரில் உன் ரிசல்ட் டைப் பார்த்திருப்பார்!’’
- அப்படியென்ருல் என் வெற்றியைக் கண்டு அண்ணு ஆனந்தக் கூத்தாடியிருப்பார் என்று சொல்லுங்கள், அண்ணி. ஆகா...!!?? என்ருன் ராஜேந்திரன் பொங்கும் பூரிப்புடன், பூரிக்கும் மனத்துடன்.
ஸார், தந்தி’’ அவன் திரும்பின்ை; ஏந்தி நின்ற சில தந்திகளைக் கையெழுத்துச் செய்து வாங்கிப் பிரித்தான். அவன் எதிர் பார்த்தது சரிதான். நண்பர்கள் அவனது தேர்வுக்குத் தங்கள் மகிழ்வைத் தெரிவித்திருக்கிருர்கள். அவர்களுக் இ கல்லாம் பதிலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள