பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

பெஞ்சமின் பிராங்ளினின்

இந்த நேரத்தில் தான் அமெரிக்காவிலே உள்ள குடியேற்ற நாடுகளில் எல்லாம் தங்களது சுதந்திர உரிமைகளுக்காக போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள். போராட்ட நேரத்தில், குடியேற்ற நாடுகளின் தேசியக் காங்கிரஸ் மகா சபை கூடும் நேரத்தில், பெஞ்சமின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்ற பெரிய அதிகாரப் பதவியைப் பெற்றார்.

அந்த பதவி மூலமாக அவர் பெற்ற ஆயிரம் டாலர் பணத்தை: குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்துக்காகப் போராடி, போர்க்களத்திலே காயமடைந்த போர்வீரர்களின் நிதிக்கு கொடையாகக் கொடுத்து தனது தேச பக்திக்கு அடைமாக நின்றார், பெஞ்சமின்.

அதற்குப் பிறகு, அரசு நிர்வாகத்திலே பணியாற்றிய அஞ்சல் துறை நின்று விட்டதால், பெஞ்சமின் புதிய தபால் திட்டத்தை நிலை நிறுத்திவார். பெஞ்சமினால் ஆரம்பித்த இந்த முறைதான், இன்றும், ஐக்கிய அமெரிக்காவிலே நடை முறையில் இருந்து வருகிறது.

பிலடெல்பியா அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாகப் பதவி வகித்த பெஞ்சமின், புதிய தபால் தலைகளை வெளியிட்டார். அதிலே ஒன்று ஐந்து செண்ட் தபால் தலையாகும். பெஞ்சமின் ஃபிராங்ளின் முகத்தை அந்த ஐந்து செண்ட் தபால் தலையிலே அச்சிட்டு பெருமை பெற்றது அஞ்சல் துறை நிர்வாகம்.

தபால் நிலயத்திற்கு வருகை தந்து தான், பொதுமக்கள் அவரவர் அஞ்சல்களைப் பெற்றுப் போவது அக்காலப் பழக்கம் இருந்தது. பெஞ்சமின் இந்த வழக்கத்தை மாற்றி அமைத்து, பொதுமக்கள் வீடுகளுக்கே அஞ்சலர்கள் சென்று அஞ்சல் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தினார். அந்த திட்டம் தான், இன்று, நம்முடைய தபால்காரர்கள் தமது வீடு தேடி வந்து கடிதங்களைக் கொடுத்துவிட்டுச் செல்லும் முறை என்றால் வியப்பீர்கள் இல்லையா?