பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

அதே கால கட்டத்தில், குடியேற்ற நாடுகளின் சுதந்திரப் போராட்டம் துவங்கப்பட்டிருக்கும் உணர்ச்சிகரமான வேளையில், பெஞ்சமின் ஃபிராங்ளின் அஞ்சல் துறை பணியின் வேகம், கவனமும் அவருக்குப் பெருமை வழங்கியது மட்டுமல்ல; அஞ்சல் துறையும் ஒழுங்கான சீரமைப்பைப் பெற்று வருக்கு ஒரு வழிகாட்டி இயக்கமாகவும் அமைந்தது எனலாம்.

இதைவிட மிக முக்கியமானது என்னவெனில், பதின்மூன்று குடியேற்ற தூர தூரப் பகுதி நாடுகள் எல்லாம் இந்த அஞ்சல் துறை தான் அந்த நாடுகளை ஒற்றுமை வட்டத்துக்குள் இணைகும் புள்ளியாக அமைந்தது. பெஞ்சமின் ஃபிராங்ளினால் வெற்றி பெற்ற அஞ்சல்துறை தொண்டுகள்தான் சிதறிக் கிடந்த குடியேற்ற நாடுகளின் பகுதிகளை எல்லாம் ஒரே நாடு என்ற ஒற்றுமை உணர்ச்சியை உருவாக்கிக் கொடுத்தது என்றால், மிகையல்ல.

பிலடெல்பியா நகரில் பாதுகாப்பு, அந்நகர மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உரிய காவல் நிலை, பிராங்ளின் மனதுக்கு நிறைவைக் கொடுக்காமையால், ஓர் இராணுவ பாதுகாப்பு முறை தேவையென்று எண்ணினார்.

தற்காலத்தில் ‘குடி’ப்படைக்கு ஊர் மக்களை சேர்க்கிறோம் இல்லையா? இதுபோல, பிலடெல்பியா நகரின் மக்களிடையே ஓர் இராணுவப் படையைப் பாதுகாப்புக்காக அமைக்க பெஞ்சமின் திட்டமிட்டார். காரணம், பிரான்ஸ், ஸ்பெயின், நகரக் கொள்ளையர்களது கொடூரங்களை அமெரிக்க குடியேற்றப் பகுதி மக்களால் சதித்துக் கொள்ள முடியாதனவாக இருந்தன. இந்தக் கொள்ளைக் கும்பல்களின் கொலைகளையும், திருட்டுகளையும், வழிப்பறிகளையும் தடுக்க, ஓர் இராணுவ அமைப்பு தேவை என்று நம்பினார்.

பிலடெல்பியா சட்டசபையில் மக்களது பாதுகாப்புக்கான துப்பாக்கிகளுக்குத் தேவையான பணத்தை ஒதுக்கு-