பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

49

ஜலதோஷம் காரணம் என்ன?

கடுமையான குளிர் காலங்களிலே ஜலதோஷம் மக்களைப் பிடிப்பது உண்டு. ஜனங்கள் நெருக்கமாக வாழும் போதும், வீடுகள் அல்லது வீட்டின் அறைகள் அடுத்தடுத்து அருகருகில் உள்ளபோதும் இந்த ஜலதோஷ நோய் மக்களைப் பற்றுவது உண்டு. ஒருவர் தும்மும்போது அந்த நோய் மற்றவரைத் தாக்கித் தொற்றுவதும் உண்டு.

அசுத்தமான படுக்கைகள், அறைகள் தூசுகள் படிந்த பழைய துணிமணிகள், அழுகிப்போன மிருகக் கொழுப்புகள் முதலியன அதிகமான ஜலதோஷத்தை மக்களிடம் தொற்றிக்கொள்ளும் தன்மையுடையதாகும்.

ஜலதோஷக் கிருமிகளையோ, நச்சுத் தன்மையான நீரையோ அவர் காலத்தில் பெஞ்சமின் அறிந்தது இல்லை. ஆனால், நாம் இன்று ஜலதோஷம்பற்றி என்ன நினைக்கின்றோமோ அதனையே அவரும் அறிந்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

கிரேக்கர்கள் கடலில் எண்ணெய் ஊற்றுவது ஏன்?

முற்கால கிரேக்கக் கப்பற்படை மாவீரர்கள், கடற் பயணம் செல்லும்போது மண்ணெண்ணெயைக் கடலில் ஊற்றுவார்கள். ஏனென்றால், முன்காலங்களில் கடல்களில் அடிக்கடி புயலடிப்பது வழக்கமாகும். அந்த நேரத்தில் கடல்களை அடக்கி அமைதிபெறச் செய்யும் நிலை, கப்பல் செல்லும் பாதைகளில் இருந்தால்தான், கப்பல்கள் புயலை அடக்கி அமைதியாகச் செல்லும். அக்கால கிரேக்க மாலுமிகள் கடலில் மண்ணெண்ணெய் ஊற்றும் பழக்கத்தை அதனால்தான் மேற்கொண்டிருந்தார்கள்.

ந. மே-4