உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

60

ராக்கி மரியாதை அளித்துப் பாராட்டியது! அதற்குப் பிறகு அந்த நகரமன்றத்திற்கும் தலைவர் ஆனார்.

1751-ம் ஆண்டு பெஞ்சமின் ஃபிராங்ளின் பென்சில்வேனியா சட்டசபை உறுப்பினரானார். சபை விவாதங்களை மிகக் கவனத்துடன் பின்பற்றி வாதாடவேண்டிய திட்டத்தின்மீது கடுமையாக வாதாடுவார். நேர்மையான வாதமும் நெஞ்சுரமும், செயற்றிறனுமுடைய ஆற்றலோடு அவர் பேசுவதும் பிரச்னைகளை விளக்குவதும் மக்களின் உள்ளங்களை வெகுவாக ஈர்த்தன.

பொது மக்கள் எல்லோர்க்கும் ஒருமுகமாகப் பயன்படக்கூடிய சட்டங்களையே அவர் சிந்திப்பார், அதனை நிறைவேற்றுவார். அங்குள்ள சட்டசபை உறுப்பினர்கள் கவனமெல்லாம் பெஞ்சமின் பக்கமே சென்றது. அவர் சட்டசபையில் மட்டுமல்ல, மற்ற பிரச்னைகளிலும் அவரைப் பெருந் தலைவராகவே மதித்து ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் சபையோர் பெற்று வந்தார்கள்.

சிவப்பு இந்தியர்களிடையே ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டிய பிரச்னை பென்சில்வேனியா சட்ட சபைக்கு ஏற்பட்டதால், அதற்கு பெஞ்சமினையே சமாதானத் தூதுவராகத் தலைமையேற்குமாறு கூறப்பட்டு, கார்லைல் கப்பலிலே அவரை அனுப்பி வைத்தார்கள்.

பெஞ்சமின் சிவப்பு இந்தியர் நாட்டுக்கு வந்ததும், சமாதானத் தூதுவரான பெஞ்சமின், சிவப்பு இந்தியர் விரும்பி அருந்தும் மதுபானமான ரம்முக்கு தடை விதித்தார். ஏனென்றால், ரம்மைக் குடித்தவுடன் அவர்கள் ஆடிப்பாடி கோலாகலமான மயக்கத்திலே தள்ளாடி மங்கையர் மஞ்சங்களிலே தவழ்ந்து கொள்வார்கள். பிறகு வந்த பணிமுடியாது. அதனால்தான், அவர் அதற்கு தடை விதித்தார்.