பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

இவ்வளவு பெறுவதானால் யாரிடம் போவது? யாரைக் கேட்பது? ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமெரிக்க போர் புரட்சி செய்வதானால் போதுமான பண பலம் வேண்டுமே என்றெல்லாம் பிலடெல்பியா சட்டசபை உறுப்பினர்கள் சிந்தித்தார்கள்.

அதனால், பிரான்ஸ் தேசத்திற்கும், பாரீஸ் நகரத்திற்கும் பெஞ்சமின் ஃபிராங்ளின் சென்றால், அவருக்குப் போதுமான அரசியல் உதவிகளும் கடனாகப் பணமும் பெற முடியும் என்று நம்பி அவரை பிரான்ஸ் நாட்டு மன்னன் பதினாராம் லூயியிடம் தூதுவராகச் செல்லுமாறு ஃபிராங்ளினை பென்சில்வேனிய சட்டசபையினரும், அரசியல் பெரும்புள்ளிகளும் கேட்டுக் கொண்டார்கள்.

அமெரிக்க நாடு அவரை ஆணையர் Commissioner என்ற பெயரோடு பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பிவைத்தது. ஆனால், பிரான்ஸ் நாடோ ஃபிராங்கிளினை இராஜாங்கத் தூதர் Ambassador என்ற பெயரால் அவரை வரவேற்று மகிழ்ந்து மாபெரும் விழாக்களை எல்லாம் நடத்தியது. அவருக்கு அங்கே அவ்வளவு அரிய நண்பர்களும் அரசு செல்வாக்கும் இருந்தன.

பிரெஞ்சு அரண்மனையிலும், அரசாங்கத்திலும்தமக்கு ஏற்பட்ட நெருங்கிய நட்பின் மூலம், பெஞ்சமின், அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கு ‘நாலரை கோடி ‘லிவர்’ எனும் பிரெஞ்சு நாணயங்களைக் கடனாகப் பெற்று அனுப்பி வைத்தார்.

இது மட்டுமல்லாமல், பதினாராம் லூயி மன்னரிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, தனியாக ஒரு கோடி ‘லிவர்’ நாணயங்களை நன்கொடையாகப் பெற்று தனது நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.