பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

75

மானால் செலவு செய்! ஒரு காசையும் துச்சமாக வீணாக்காதே.

◯ பிறரைத் துன்புறுத்தாமல் நேர்மையாக நட. கபடு, சூடு, பொய், பழிக்குப் பழி, பாவம் எதையும் நேர்மை தவறிச் செய்யாதே! எதைப் பேசினாலும் எங்கே பேசினாலும், எப்போது பேசினாலும் உண்மை ஒன்றையே உரையாடு.

◯ சுத்தமாக இரு. வாழும் இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்; உணவு, உடை, பழக்கவழக்கங்களிலும் அசுத்த எண்ணங்களுக்கு இடம் தராதே!

◯ குழத்தை பெறுவதற்காகவோ, உடல் நலத்திற்காகவோ மட்டும் அபூர்வமாக ஆண்-பெண் உறவுகொள், மானத்திற்கு களங்கம் ஏற்படுமாறு மாற்றாரிடம் ஆண்-பெண் உறவு தொடராதே!

◯ பணிவாக நடக்கக் கற்றுக்கொள்! சகிப்புத்தன்மையோடு வாழ முற்படு. இயேசு நாதரையும் சாக்ரடீசையும் முன்னுதாரணமாகக் கொண்டு வாழக் கற்றுக்கொள்.

◯ தன்னடக்கம்தான் உயிர்ப்பண்பு. அது மூளைக்குத் தெளிவைத்தரும்; குளிர்ச்சியைக் கொண்டுவரத் தூண்டும்; ஆசை, கவர்ச்சி, ஆத்திரம், கோபம் என்ற மனத்துன்பங்களிலே இருந்து உன்னையே நீ உணர்ந்து காப்பாற்றிக் கொள்.

◯ உணவு கொள்வதற்கு முன்பு உடற்பயிற்சி கொள். உண்டபின் செய்யாதே; முன்னது விருத்தி தரும்; பின்னதோ செரிமானத்திற்கு இடையூறு செய்யும். உறக்கம் இயற்கையாக வரும் கலக்கமற்றதாகவும் அமையும். வயிறு புடைக்க உண்டு விட்டு உறங்குவாயானால் கெட்ட கனவுகளும் பயங்கர எண்ணச் சுழல்களும் உண்டாகும்.