பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

77

◯ நாம் எல்லோரும் ஒன்றாகக் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஒற்றுமையாகத் தொங்குவோம். இல்லையென்றால், நாம் தனித்தனியாகவே தூக்கில் தொங்க நேரிடுவது நிச்சயம்.

◯ நல்ல போர் என்ற ஒன்று இருந்ததில்லை; கெட்ட சமாதானம் என்று ஒன்று இருந்தது இல்லை.

◯ பலவிதமான கட்சிகளின் பலவிதமான கொள்கை நோக்கங்களே குழப்பங்களுக்கு காரணமாகும்.

◯ ஒரு கட்சியானது பொது நோக்குடன் செயல்பட வேண்டும். சுயநலப்போக்கு மக்களிடம் பகையை உருவாக்கி விடும்.

◯ பொது விவகாரங்களில் ஈடுபடுவோர் சிலர்தான். மனித குலத்துக்கு நன்மை உண்டாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் பாடுபடுவார்கள்.

◯ அறிஞர்கள் அனைவரும் ஒரே மதத்தைத்தான் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள், என்றனர் அறிஞர்கள். அங்கிருந்த பெண்மணி ஒருத்தி, “அது என்ன மதம்?” என்று கேட்டாள். அதற்கு அறிஞர் உடனே, “அறிவாளிகள் வாய்திறந்து சொல்வது இல்லை பெண்ணே” என்றார்.

◯ ஒரே கடவுள்தான் உண்டு. அறிவின் ஊற்றுநீர் வீச்சுதான் கடவுள்.

◯ மனிதர்களுக்கு நல்லது செய்வது தான் கடவுளுக்குச் செய்யும் மிக மிக நல்ல தொண்டு.

◯ கடவுள், தன் நற்கருணையால் இந்த உலகத்தை ஆள்கிறார்! அவரைப் போற்றுவதும் ஆராதனை செய்வதும்தான் அவரை நாம் வழிபாடு செய்தலாகும்.

◯ ஆத்மா அழிவற்றது.

◯ பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா? எங்கேயாவது சென்று கொஞ்சம் கடன் வாங்கிப்பார்!