பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் II *- மங்கையாராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய் திட வேண்டும் அம் மா' என்று பெண் ணின் பிறப்பின் மேன்மையைப் பெருமைப்படுத்திப் பாடிய புலவர்களும் உண்டு. ஆமாம், தாய் மையெனும் தூய்மை நிறைந்தத் தொண்டுள்ளம் கொண்டதோர் தெய்வப் பிறப்பல்லவா! அழகும் குணமும் அறிவும் திருவும் நிறைந்த பெண்கள் அருமையும் பெருமையும் நிறைந்த வாழ்வுக்குக் கண்கள். மகிழ்ச்சி மாடத்தின் தூண்கள். பெண்ணாகப் பிறந்த ஒவ்வொரு வரும் , தான் பேரழகியாக வாழ வேண்டும் , பிறர் ஏறெடுத்துப் பார்க்கும் பெருமை நிறைந்த பீடும் பொலிவும் பெற வேண்டும் என்றுதான் நினைக் கிறார்கள், நடக்கிறார்கள், முயல்கிறார்கள். ஆண்களை விட பெண்கள் தான் உடலைப் பற்றி அதிகக் கவலையும் அக்கறையும் காட் டுபவர்கள். இருந்தாலும் அழகு மிகுந்த சிறந்த உடலை அடையும் வழிகளை ஒரு சிலரே அறிந்து, அடைய வேண்டிய அழகை, சிறப்பை அடைந்து, ஆனந்த வாழ்க்கை நடத்துகின்றார்கள். மற்றவர்களோ, விவரம் புரியாமல் மனம் போனபடியே முயன்று, இறுதியில் இருந்ததையும் இழந்து, ஏக்கப் பெரு மூச்சுடன் வாழ்கின்றார்கள். நல்ல உடல் பெற வேண்டு மென்ற நோக்கம் உள்ளவர்கள் ஏக்கம் அடையக் கூடாது என்ற ஒர் நோக்கத்திலே தான் இந்நூல் வருகின்றது.