பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 s டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா இருத்தல் போன்ற பண்புகளைப் பெற்றுக் கொண்டாலும், என்டோகிரைன் என்ற உள்ளுறுப்புச் சுரப்பிகளால்தான் சீராகவும் செழுமையாகவும் மாற்றப் படுகின்றன. அத்துடன் மூளைக்குக் கீழே அமைந்திருக்கின்ற பால் (Sex) உணர்ச்சியைத் தூண்டும் சுரப்பி இவைகளின் ஒருங்கிணைந்த செயலின் கட்டுப்பாட்டின் கீழ்தான், இவைகள் வளத்துடன் வாழ்கின்றன. மேலே கூறியிருக்கும் சுரப்பிகளுக்கு நூதனமான வேலைக்காரர்கள் பலர் உண்டு. அந்த அற்புதமான தூதுவர்கள் இரத்தத்தின் வழியே, உடல் முழுதும் ஒடி, சுரப் பிகள் இடுகின்ற ஆணையையும் , அவைகளின் அதிகாரத்தையும், அவ்வப்போது தெரிவிப் பார்கள். சுரப்பிகளிடமிருந்து பூரண அதிகாரம் பெற்ற அந்தத் தூதுவர்கள், ஒன்று கூடி, எங்கெங்கே செல்கள் (Cells) செழிப்புடன் வளரவேண்டும் என்பதைத் திட்டமிட்டுத் தீர்மானிக்கிறார்கள். இவ்வாறு பிட்யூட்டரி சுரப்பியும், பால் உணர்ச்சி தரும் சுரப்பியும் சேர்ந்தே மார்பகம் திரட்சியாகவும், உருண் டு திரண்டதாகவும் வளருவதற்கேற்ற செயலையும் வழி வகைகளையும் செய்கின்றன. நுண்ணிய தன்மையில் பணியாற்றும் நூதனமான வேலைக்காரர்கள் எங்கேயிருந்து தோன்றுகிறார்கள் தெரியுமா? நாளமில்லா சுரப்பிகள் என்று கூறப்படும் எண் டோகிரைன் s சுரப் பிகளினால் தான் உருவாக்கப்படுகின்றனர். அத்தகைய ஆற்றல் மிக்க நாளமில்லாச்சுரப்பிகள் எவ்வாறு இயக்கப்படுகின்றன