பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா - = - - நமக்கே தனக்கு மண்ணுக்கும் விண்ணுக்கும் விரிகின்ற மாபெரும் விசுவரூபம் எடுக் கும் சக்தி உண்டு என்று இராமபிரான் சொல் லித் தான் அனுமானுக்குத் தெரியும் என்பது புராணக் கதை. அதே நிலைதான் இங்கும். நம் மால் முடியும் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொண்டு தொடர்ந்தால் நிச்சயம் பயனுண்டு...வெற்றியும் உண்டு. எண்டோ கிரைன் சுரப்பியை எவ்வாறு இயக்கலாம் ? உணவில் உள்ள ஊட்டம் தரும் விட்டமின்களால் இரும்புச் சத்துக் களால் உருவாக்கப்படுகின்ற, உழைக்கும் ஆற்றலைப் பெறுகின்ற, உணர்ச்சி யூட் டுகின்ற எண் டோகிரைன் சுரப் பிகளை, நாம் உண்ணுகின்ற உணவு வகையால் கட்டுப்படுத்தி இயங்க வைக்கலாம். அதாவது, சத்துள்ள உணவு வகைகளை, எல்லா வைட்டமின்களும் நிறைந்த, உணவுை வகைகளையும் முழு அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் போதும். பழவகைகள், பால் பச்சைக் காய்கறிகள், பசுங் கீரைகள், கிழங்கு வகைகள் முக்கியமான உணவு வகைகளாகும். உடலழகுப் பயிற்சிகளால் இச்சுரப் பிகளை இயல்பாக இயங்குமாறு செய்யலாம். ஆழ்ந்த சுவாசப் பயிற்சியின் மூலம் அதாவது அதிகக் காற் றினை நூரையீரலுக்குள் இழுத்து, அடக்கி, பிறகு வெளிவிடும் பயிற்சி மூலமாக இச்சுரப்பிகளை இயக்கலாம். கலைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல மார்பகம் இருக்கும். அதாவது அதைப் பாதுகாத்து