பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

உலக அளவில் ஓடுகளப் போட்டிக்கழகம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கழகம் அறிவித்திருக்கும் கணக்குப்படி, ஆயிரத்திற்கு மேற்பட்ட மாரதான் ஓட்ட வீராங்கனைகள் போட்டிகளில் பங்கு பெற்றிருக்கின்றனர்.இதுவரை, உலக அளவில் 100 மாரதான் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன.

வீராங்கனைகள் எண்ணிக்கையில் . அதிகமானது போலவே, வெற்றிச்சாதனையிலும் உயர்ந்தே இருக்கின்றனர். இதனை பெண்கள் ஏற்படுத்தியிருக்கும் மாபெரும் புரட்சி என்றே புகழ்ந்து கூறலாம்.

நாம் வாழுகின்ற இருபதாம் நூற்றாண்டுக் காலத்தை அணுவை ஆட்படுத்தி அனுபவிக்கும் காலம் என்று சிலர் கூறுவார்கள். இதனை மின்சார யுகம் என்றும் மிகைப்படுத்தி பேசுவார்கள். ஆனால், நாம் இதனை பெண்களின் நூற்றாண்டு என்று கூட பெருமை பொங்கக் கூறலாம். காரணம் என்னவென்றால், இந்தக் காலம் ஏந்திழைகளின் ஏற்ற மிகுகாலம் என்பதால்தான்.

சமுதாயத்தில் சரிபாதி அங்கமாக விளங்கும் பெண்ணினம், பலவீனப்பட்ட இனம் என்ற பாசாங்கு மொழியெலாம் பஞ்சாகப் பறந்து போய்விட்டது. பலம் நிறைந்த பெண்ணினம், சதாயத்தில் இன்று சரி நிகர் சமானம் என்ற இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டது.