இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை
மானம் போகும் மக்கள் மிகப் பெறின்
மிச்சம் பிடித்து வாழ்; மீளக் கடன் இரா
மீசை வைக்க ஆசைகொள் தமிழா!
முக்தியால் வளர்வது மூடத்தனமே
மூர்க்கனே மேல் முட்டாளைக் காட்டிலும்!
மென்மையின் பேரால் பெண்மை இழந்தது வன்மையே ஆகும்
மேட்டுக் குடியெலாம் மேற்குடி ஆகா
மொட்டையும் கொட்டையும்ம மோட்சத்தைக் காட்டா!
மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை