இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கோயிலென்றும் குளமென்றும் போக வேண்டாம்
குழவிக்கல்லை லிங்கமென்று சொல்ல வேண்டாம்
குடங்குடமாய்ப் பாலதனைக் கொட்ட வேண்டாம்
கொட்டியபின் அதை நக்கிக் குடிக்க வேண்டாம்
அர்ச்சனைக்குத் தட்டேந்தி நிற்க வேண்டாம்
அதில் வேறு தட்சணைகள் வைக்க வேண்டாம்
அறிவுக்கு வித்திட்ட அஞ்சா நெஞ்சன்
அருந்தலைவன் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!