பக்கம்:பெரியார் அறிவுச் சுவடி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திதியென்றும் திவசமென்றும் கொடுக்க வேண்டாம்

தின்பவர்கள் பிதுர்க்களென்று எண்ண வேண்டாம்

கோமாதா குலமாதா ஆக வேண்டாம்

கோமயத்தில் குணநலனைக் காண வேண்டாம்

சாணியையும் பிள்ளையாராய்ச் செய்ய வேண்டாம்

சரணமென்று விழுந்ததனை வணங்க வேண்டாம்

முட்டாள் தனத்தையெல்லாம் முறியடித்தோன்

மூதறிஞன் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!