பக்கம்:பெரியார் அறிவுச் சுவடி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 மதமென்னும் வெறிபிடித்து அலைய வேண்டாம்

மல்லுக்கு அதற்காக நிற்க வேண்டாம்

சிந்திக்கும் முன்எதையும் செய்ய வேண்டாம்

செய்தபின் சிந்தித்து வருந்த வேண்டாம்

பதினெட்டுப் புராணத்தைப் படிக்க வேண்டாம்

படித்துவிட்டுப் பகுத்தறிவை இழக்க வேண்டாம்

‘எம்மதமும் சம்மதமே’ என்ற மேலோன்

ஏறொத்த பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!