பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ஒ. பெரியோர் வாழ்விலே வரி செலுத்த வேண்டும்? தொகையைச் சொன்னால், உடனே கட்டிவிடுகிறேன்’ என்றார். அந்த மிராசுதாருக்கு அந்தத் தாலுகாவில் பல இடங்களில் நிலம் இருந்தது. சுமார் இருபது கிராமங் களில் அவருக்கு நிலம் இருந்ததால் கணக்குகளைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும். குமாஸ்தாக்களில் ஒருவரைக் கூப்பிட்டுக் கணக்கைப் பார்க்கச் சொல்லலாம் என்று தாசில்தார் நினைத்தார், அப்போது, அருகிலே சிறுவன் முத்து சாமி நின்று கொண்டிருந்தான். அவனிடம், அந்த பிராசுதாரின் பெயரைச் சொல்லி, இவருடைய வரிப் பாக்கி எவ்வளவு என்று கேட்டுவா’ என்றார் தாசில்தார். ஆனால், முத்துசாமி யாரிடமும் போய்க் கேட்கவு மில்லை; கணக்குப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கவு மில்லை. நின்ற இடத்தில் நின்று கொண்டே, இவர் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று ஏதோ ஒரு தொகையைச் சொன்னான். அதைக் கேட்ட தாசில்தார், என்னடா இது! வாயில் வந்த ஒரு தொகையைச் சொல்கிறாயே! சம்பந்தப்பட்ட கணக்குப் பிள்ளைகளைக் கூப்பிடு. கணக்கைச் சரியாகப் பார்த்துச் சொல்ல வேண்டும்’ என்றார். தாசில்தார் விருப்பப்படியே கணக்குப் பிள்ளைகளை அழைத்து வந்தான் முத்துசாமி. அவர்கள் கணக்குப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, ஒரு காகிதத்தில் ஒரு தொகையைக் குறித்துக் கொண்டார்கள். பிறகு,