பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 so ஒ. பெரியோர் வாழ்விலே அதேபோல் இந்துக்களையும் அவர் காப்பாற்றினார். கலகத்தின்போது, ஒரு முஸ்லிம் வீட்டில் 13 இந்துக் கள் பயந்து போய் ஒளிந்திருந்தனர். அவர்களைப் பத்திரமாக அவரவர் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட வேண்டும் என்று அந்த வீட்டுக்கார முஸ்லிம் மிகவும் முயன்று பார்த்தார். அந்தச் சமயத் தில் வாடகை மோட்டார்களோ, வண்டிகளோ கிடைக்கவில்லை. இந்த விஷயம் ஆலாத்துக்கு எட்டியது. அன்று நடு இரவில் அந்த வீட்டுக்கு அவர் வந்தார். நகர சபைக்கு ஆள் அனுப்பி மோட் டார் கொண்டு வரச் செய்தார். அதில் 13 இந்துக் களையும் ஏற்றி அவரவர் வீட்டிலே பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்தார். கலகம் நடந்த மூன்று நாட்களும் ஆஸாத்துக்கு ஒய்வு கிடையாது; உணவு கிடையாது, உறக்கம் கிடையாது! பம்பரமாய்ச் சுழன்று சுழன்று கலகத்தை அடக்கப் படாத பாடுபட்டார்.