பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றாடியால் காயம் பட்டவர் ! அப்போது அந்தச் சிறுவனுக்கு ஏழு வயது இருக்கும். அந்த வயதிலே, அவன் நன்றாக மரம் ஏறக் கற்றுக் கொண்டிருந்தான். எந்த மரத்திலும் எளிதாக ஏறிவிடுவான் ! ஒருநாள் அவன், தன் வீட்டுத் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போது, சில சிறுவர்கள் அந்தத் தோட்டத்திற்குள் ஒடி வந்தார்கள். எதற்காக இப்படி ஒடி வருகிறீர்கள்?’ என்று அந்தச் சிறுவன் அவர்களைக் கேட்கவில்லை. கேட்பதற்கு முன்பே, விஷயம் விளங்கி விட்டது. பெரிய காற்றாடி ஒன்றைச் செய்து, மைதானத் திலே அவர்கள் பறக்க விட்டுக் கொண்டிருந்தார்கள்.