ஒ, பெரியோர் வாழ்விலே ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும். நான் இப்போது நன்றாகத்தான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். ஆனால், ஆபரேஷன் செய்துகொள்ளும் சமயம் ஒருவேளை நான் நினைவு இழந்து விடக்கூடும். அப்போது எனக்கு அந்நிய மொழியாகிய ஆங்கிலம் பேச வருமோ, வராதோ! அப்போது நான் என் சொந்த மொழியாகிய வங்காளியில்தான் பேசுவேன். நான் பேசுவது என்ன என்பதை வங்காளி தெரிந்த டாக்டராயிருந்தால், எளிதில் புரிந்து கொள்வார். இங்குள்ள டாக்டர்களால் புரிந்து கொள்ள முடியுமா? அதனால்தான் நான் கல்கத்தா போகவேண்டும் என்று சொல்கிறேன்’ என்றார். -இந்த நிகழ்ச்சியைத் திரு.வி.க. அந்த இளைஞரி டம் கூறிவிட்டு, பார்த்தீர்களா, தாய்மொழியின் பெருமையை ஆபத்துக்கு உதவுவது அந்நின் மொழியன்று; தாய்மொழிதான்’ என்றார். மறுவிநாடி, 'அடடே, இப்போது நான் கூறிய நிகழ்ச்சியை நான் எழுதிய வாழ்க்கைக் குறிப்புக்கள்’ என்ற புத்தகத் தில் சேர்க்க மறந்து போனேனே!’ என்றார். ஆயினும், அந்த அரிய நிகழ்ச்சியை நம்மால் மறக்க முடியுமா?
பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/64
Appearance