பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு ருபாய் ஊழியர் ! திருவாரூரிலே ஒரு தாசில்தார் இருந்தார். ஒரு நாள் காலையில், வீட்டில் உட்கார்ந்து அவர் எதையோ படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே சிலர் ஒடி வந்து, 'ஐயா, ஐயா, எங்கள் கிராமத்துக்குப் பக்கத்தில் இருந்ததே அணை. அதை வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விட்டது? உடனே வந்து கவனிக்க ஏற்பாடு செய்ய வேணும்’ என்று வேண்டினர். இதைக் கேட்டதும் தாசில்தார் ஒரு சேவகனை அழைத்து, 'நீ உடனே போய், அலுவலகத்தில் யாராவது குமாஸ்தா இருந்தால் கையோடு கூட்டிக் கொண்டு வா. உம். சீக்கிரம்’ என்று உத்தரவிட்டார்.