பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

έ5 எண்ணங்கள் அடைபட்ட செய்திகள் யாவும் தலை காட்டத் தொடங்கின. அன்று தான் அவர்களின் கணவன்மார்கள் பாரிசுக்குத் திரும்பினார்கள். கோடைக் காலத்தைப் போக்க அவர்கள் தேர்ந்தெடுத்த அச்சிற்றார், மோப்பம் பிடிக்கும் ஆண்கள், வட்டமிடும் கட்டமுகர்கள், அடிக்கடி வரமுடியாத தொலைவில் கரத்தை விட்டு விலகி இருந்தது. அந்தக் காரணத்தாலேயே அச்சிற்றூர் அவர்களுக்கு மிக மிகப் பிடித்திருந்தது எண்ணலாம். பாரிசிலுள்ள அரசியல், பொருளாதாரம், களியாட்டம் முதலியவைகளை முடித்துக் கொண்டு ஒரு கிழமையோ, ஐந்து நாட்களோ சென்று கூடத் திரும்பி வரலாம் என்று சினேக் திருப்பார்கள். அவர்களுக்கு அச்சிற்றுார். அவ்வளவு பிடித்திருந்தது. காரணம் மனைவியைப் பற்றி கவலைப் படவேண்டியதில்லை விழிப்போடு இருக்க வேண்டிய சிலேயைப் அச்சிற்றுார் உண்டாக்காது என்ற முடிவுக்கு வந்தார்களே ஒழிய வெளிக்குக் கூறிக் கொள்ள வெட்கப் பட்டார்களள். . . . . . கணவன் தன்னோடு இல்லாததால் சீமாட்டி ஆந்திரே பிரசியருக்கு எரிச்சலாக இருந்தது. பொழுது போக்க என்ன செய்வது என்று நினைத்தாள். தன் வீட்டிற்கு விருந்துண்ண வரும்படி சீமாட்டி கோயேமியைக் கேட்டுக் கொண்டாள். இருவருமாகச் சேர்ந்து அடுக்களையில் புகுந்து அன்றைய உணவை மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டே சமைத்தார்கள். - - - - - வேலையே செய்தறியாதவர்கள், தட்டு முட்டுக்களேத் தொட்டறியாதவர்கள், செல்வத்திலே பிறந்து சிரோடு வளர்ந்தவர்கள். அடுக்களையில் புகும்போது அடக்க முடியாத மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்யும். - அங்கு இங்கு ஓடி அது இது செய்கின்ற தன்