உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 75.

பின்சென்ற பிள்ளையார் தமைநோக்கிப் பெருந்தவத்

தோன். முன்செல்கை தனை ஒழிந்து முனிவார்போல்

விலக்குதலும் மின்செய்பொலங் கிண்கிணிக்கால் கொட்டி அவர்

'உன்செய்கை இதுவாகில் போதென்றங் குடன்

சென்றார்.'

பின்-தம்முடைய தந்தையாராகிய சிவபாத இருதயருக் குப் பின்னால. சென்ற-எழுந்தருளிய. பிள்ளையார் தமைஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை. தமை: இடைக்குறை. தம்: அசைநிலை. நோக்கிபார்த்து. ப்: சந்தி. பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். தவத்தோர்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ராகிய ஆண் குழந்தையாரைப் பெற்றெடுப்பதற்கு உரிய தவத்தைப் புரிந்த அந்தச் சிவபாத இருதயர். முன்-முன் னால், செல்கை தனை-போவதை. தனை: இடைக்குறை. தன்: அசைநிலை. ஒழிந்து-விட்டு விட்டு. முனிவார் போல்தம்முடைய புதல்வரைச் சினந்து கொள்பவரைப் போல். விலக்குதலும்-தம்முடைய புதல்வரைத் தம்மோடு வாராத வாறு தடுத்தவுடன். மின்-மின்னலைப் போல்; உவம ஆகு பெயர். செய்-ஒளியை உண்டாக்கும். பொலங் கிண்கிணி. தங்கத்தாற் செய்ய்ப் பெற்ற கிண்கிணிகளை அணிந்திருக் கும். கிண்கிணி-கிண்கிணி என்று ஒலிக்கும் அணிகலன். க்: சந்தி. கால்-தம்முடைய திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். கொட்டி-தரையில் தப்புத்திப் பென்று தட்டிக் கொண்டு. அவர்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ராகிய ஆண் குழந்தையார். மீளா மை-திரும்பி எழுந்தருளிச் செல்லாத பான்மையால். உன்-உன்னுடைய. செய்கைசெயல். இதுவாகில்-இது ஆனால். போது-என்னுடன் வரு வாயாக. என்று-என அந்தச் சிவபாத இருதயர் கூறிவிட்டு, அங்கு-அந்த இடத்தில். உடன்-அந்த நாயனாரை அழைத்