உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பெரிய புராண விளக்கம்-2

காப்புக்கள், கங்கணங்கள், ஒட்டியாணம், புல்லாக்கு, தோடுகள், கால் காப்புக்கள், சிலம்புகள், கைவிரல் மோதிரங். கள், காலாழிகள், பீலாழிகள், மெட்டிகள் முதலியவை. தெற்றிதொறும - ஒவ்வொரு திருமாளிகையில் உள்ள ஒவ்வொரு திண்ணையிலும். நடம்-நடனத்தை. பயிலப்புரிய வும். நங்கள்-அடியேங்களுடைய, இது சேக்கிழார் தம்ம்ை யும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. பிரான்தலைவனாகிய வன்மீக நாதன் திருக்கோயில் கொண்டருளி யிருக்கும். திருவாரூர்-திருவாரூர் என்னும். நகர்-பெரிய தலத்தில். வாழ்வார்-வாழும் மக்கள்: ஒருமை பன்மை மயக்கம், நம்பியை-ஆளுடைய நம்பியாகிய சுந்தர மூர்த்தி நாயனாரை. முன்-திருவாரூருக்கு முன்னால், பொங்கு-அழகு பொங்கியிருக்கும். எயில்-திருமதிவினுடைய, நீள்-உயரமான. திரு-அழகிய வாயில்-வாசலினுடைய, புறம்-வெளியில். உறசேர. வந்து-திருவாரூரில் வாழும் தொண்டர்கள் வந்து. எதிர்கொண்டார்-சுந்தர மூர்த்தி நாயனாரை எதிர் கொண்டு வரவேற்றார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

பெண்மணிகளின் கண்களுக்குக் கயல் மீன்கள் உவமை: கயலார் தடங்கண்ணி.', 'கயலார் தடங்கண் அஞ்சொல் நல்லார்', 'கயலினிணைக் கண்ணாள்.', 'கயலார் கருங் கண்ணி.', 'கயலார் கண்ணார்,, 'கயலன அரிநெடுங் கண்ணி.", கயல சேல கருங்கண்ணியர். கயல்நெடுங் கண்ணி னார்கள்.', ' க்யலன வரிநெடுங் கண்ணியோடு., "ஓர்வரு கண்கள் இணைக்கயலே.', 'உமையவள் கண்கள் இணைக்கயலே.', 'அங்கயற் கண்ணி.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்.” என்று மாணிக்க வாசகரும், கயலியல் கண்ணி.” என்று கபிலதேவ நாயனாரும், கயலேர் நெடுங்கண்.' 'செருக்கய லன்ன சேயரி நெடுங்கண்.”, கயல்புரை கண்ணி.", "செருக்கயல் உண்கட் சீதையை.', கயலேர் கண்ணிதுயிலேற்றெழவே.”, கயல்மிகு கண்ணியைக் கவவுப் பிணி நீக்கி. (பெருங்கதை, 1.40, 359, 42:131, 47: 235,