உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 பெரிய புராண விளக்கம்-2

பின்பு உள்ள 147-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாய னார் பரவையார் திருவாரூர்ப் பூங்கோயிலுக்குள் நுழைந்த அதைப் பார்த்து, என்னுடைய உள்ளத்தைப் பறித்துக்கொண்ட இந்த மயிலைப் போன்ற சாயலையும் நடையையும் பெற்ற பெண்மணியினுடைய இனிய சிவந்த கோவைப் பழங்களைப் போன்ற அதரங்களோடு கூடிய வாயைப் பெற்ற இளைய பூங்கொடியைப் போன்ற பெண்மணி யாரோ?' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, அன்றைக்கு அந்த இடத்தில் அவருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த மக்கள், அந்தப் பெண்மணியார் நங்கையாகிய பரவையார் ஆவார்; தேவ லோகத்தில் வாழும் தேவர்களைப் போன்ற தகுதியைப் பெற்றவர்களுக்கும் போய்ச் சேர்வதற்கு அருமையாக விளங்குபவர்' என்று கூற. பாடல் வருமாறு:

வன்றொண்டர் அதுகண் டென்

மனம்கொண்ட மயிலியலின் இன்தொண்டைச் செங்கனிவாய்

இளங்கொடிதான் யார்?' என்ன அன்றங்கு முன்கின்றார்,

அவர்கங்கை பரவையார் சென்றும்பர் தரத்தார்க்கும்

சேர்வரியார்." எனச் செப்பு. '

இந்தப் பாடல் குளகம். வன்றொண்டர்-வன்றொண்ட, ராகிய சுந்தர மூர்த்தி நாயனார். அது-பரவையார் திருவாரூர்ப் பூங்கோயிலுக்குள் நுழைந்த அந்தச் செயலை. கண்டு-பார்த்து. என்-அடியேனுடைய. மனம்-உள்ளத்தை. கொண்ட-பறித்துக் கொண்ட. மயில்-இந்த மயிலைப் போன்ற உவம ஆகுபெயர். இயலின்-சாயலையும் நடையை யும் பெற்ற பெண்மணியினுடைய ஒருமை பன்மை மயக்கம்: ஆகு பெயர். இன்-இனிய தொண்டைச் செங்கணிசிவந்த கோவைப் பழங்களைப் போன்ற அதரங்களை