உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 433

யாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக் காதியாய் நின்ற அரன்.' என்று காரைக்கால் அம்மையாரும், 'இறைவர் வந்தென் சித்தமராய் அகலாதுடன் ஆடித் திரிபவரே.', 'உள்ளத்தினுள்ளும் திரிதரினும்.', 'சிந்திக்கச் சிந்தாமணி ஆகித் தித்தித் தமுதமுமாம்.', 'எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான்.” என்று சேரமான் பெருமாள் நாயனாரும், 'தஞ்சமென் றொழுகும் தன் அடியார்தம் நெஞ்சம் பிரியா நிமலனை.", "உள்ளம துருகிக் கலந்து கசிந்துதன் கழலிணை யவையே நினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனை.’’ என்று நக்கீரதேவ நாயனாரும், மாமனத்தைக் கூப்பிப் புலர்ந்தும் புலர்ாத போதும் கலந்திருந்து கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண் பெளியன் தெண்ணிர் சடைக்கரந்த தேவு:', உளம் மாசற்றக் கமலம் இல்லா அடல்வெள்ள்ே றுர்ந்துழலும் அங்கமல வண்ணன் அடி.' என்று கபிலதேவ நாயனாரும், 'அடியேன் மனம் புகுந்தது.' நின்னை நினைப்பவர் கொம்மை" மனத்தினும் தில்லை மன்றினும் நடம்ஆடும் அம்பலவாண.', 'அடியேன் மனத்தே வந்து சந்திக்கவே.", " சிந்தைத் தாமரைச் செழுமலர்ப்பூந்தவி செந்தைநீ இருக்க இட்டனன்.', 'என் உள்ளத்தே நின்ற ஒளி.', 'தம் அடியார் மனம்விட் டகலா மதிற்கச்சி ஏகம்பர்.', 'அன்பு செய்வோர் நெஞ்சரத் தாழ்வுகந்தோர்.", "பணிவோர் மனத்திட்ை வாரி ஆகிய வனப்பும்.” என்று பட்டினத்துப் பிள்ளையாரும், 'பூங்கழல்நல்ல புலத்தினர் நெஞ்சேயவன்.”, "கிங்கிணித் 'தாட்செய்ய பாதம் என்னுள் புகவ்ே.', வேதகச் சிந்தை விரும்பியவன்.' நின்னை என்னுள் வைத்த மதியே." என்று நம்பியாண்டார் நம் பி யும், "அடியே போற்றி மறவாமை தலைநின்ற மனமே செம் பொற் கோயிலர்." என்று உமாபதி சிவமும், சிந்தை யார முத்ாகிய செஞ்சடைத் தந்தையார்.”, “மனக்கோயிலுள் விருத்தி: "இந்த் ஆலயத்தரனார்." என்று சேக் கிழிர்ரும்பர்டியிருள்யவற்ற்ைக்காண்க. பெ.-2-28 m

t