76 பெரிய புராண விளக்கம்-2
வேதம் என்னும் நான்கு வேதங்களும் ஓலமிட்டும். இன்னும் தெரிந்து கொள்வதற்கு அருமையானவன் ஆகிய கிருபாபுரீசன் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பிடித்துக் கொண்டு ஒரு தடவை, இது நியாயமா?’ என்று ஒல மிடப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் அவரை விலகச் செய்து, இத்தகைய பெருமையைப் பெற்ற, நியாய முறை உள்ள இந்தப் பூமண்டலத்தில் இல்லாத வழியை மேற்கொண்டு கோபத்தை அடைகின்ற அழகிய வேதியராகிய முனிவரே, நீர் எந்த ஊரில் வாழ்கின்றீர்? அதைச் சொல்லும்’ ’ என்று கூறினார்கள். பாடல் வரு.
LD T&]]]: -
'அருமறை முறையிட் டின்னும் அறிவதற் கரியான் பற்றி
ஒருமுறை முறையே என்ன உழைகின்றார் விலக்கி இந்தப் பெருமுறை உலகில் இல்லா நெறிகொண்டு பிணங்கு கிறை திருமறை முனிவ ரேநீர் எங்குளிர் செப்பும் என்றார்.”
அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும்; ஒருமை பன்மை மயக்கம். முறையிட்டு-ஓலமிட்டும். இன்னும்-இனியும். அறிவதற்கு-தெரிந்து கொள்வதற்கு. அரியான்-அருமையானவன் ஆகிய கிருபாபுரீசன். பற்றிசுந்தரமூர்த்தி நாயனாரைப் பிடித்துக்கொண்டு.ஒரு முறை ஒரு தடவை. முறையோ-இது நியாயமா. என்ன-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. உழை-அவருடைய பக்கத் தில். நின்றார்-நின்றுகொண்டிருந்த மக்கள்; ஒருமை பன்மை மயக்கம். விலக்கி-அவர் ஓலமிடுவதைத் தடுத்து விட்டு. இந்த-இத்தகைய. பெரு-பெருமையைப் பெற்ற: முறை-நீதி முறை நடைபெற்று வரும். உலகில்-பூ மண்ட லத்தில். இல்லா-எங்கும் இல்லாத. நெறி-வழியை. கொண்டு - மேற்கொண்டு. பிணங்குகின்ற-கோபத்தை அடைகின்ற. திரு-அழகைப் பெற்ற மறை-வேதியராகிய,