#02 பெரிய புராண விளக்கம்-7 அடுத்து வரும் 235-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அடியேனுடைய உள்ளத்தில் விளங்கும் தென் திசை யில் இருக்கும் திருஆரூர் என்னும் பெரிய சிவத்தலத்தை ஆட்சி புரிந்தருளும் மையைப் போன்ற கரியநிறம் தழைக்கும் திருக் கழுத்தைப் பெற்றவராகிய தியாகராஜப் பெருமானா ருக்குரிய திருவாதிரைத் திருநாளில் மகிழ்ச்சியை அடையும் செல்வம் இந்தத் தகுதியை உடையது என்று என்ன அடி யேன் கூறுவேன்?' என அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரிடம், முத்துவிதான மணிப் பொற் கவரி' என்று தொடங்கித் திருவாய் மலர்ந் தருளிச் செய்யும் மாலையாகிய ஒரு திருப்பதிகத்தைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு: ' சித்தம் நிலாவும் தென்திரு ஆரூர் நகராளும் மைத்தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ்செல்வம் இத்தகை மைத்தென் றென்மொழிகேன்’ என் - - றருள் செய்தார். 'முத்து விதான மணிப்பொற் கவரி மொழிமாலை. ’’ சித்தம்-அடியேனுடைய உள்ளத்தில், நிலாவும்-விளங் கும். தென்-தெற்குத் திசையில் இருக்கும். திரு ஆரூர்திருஆரூர் என்னும். நகர்-பெரிய சிவத்தலத்தை ஆளும். ஆட்சி புரிந்தருளும். மை மையைப் போன்ற கரிய நிறம். கரிய நிறம் என்றாலும் இங்கே நீல நிறத்தையே கொள்ள வேண்டும். நீலநிறத்தையும் கரிய நிறம் என்று கூறுதல் ஒரு மரபு: நீல நிறக்காக்கை' என வருதலைக் காண்க. த்:சந்தி. தழை-தழைத்திருக்கும். கண்டர்-திருக்கழுத்தைப் பெற்ற வராகிய தியாகராஜப் பெருமானாருக்கு உரிய, ஆதிரை நாளின்-திருவாதிாைத் திருநாளில் மகிழ்.மகிழ்ச்சியை அடை ,யும். செல்வம்-நிதியம். இத்தகை மைத் து-இந்தத் தகைமை யைப் பெற்றது. என்று-என. என்.என்ன. மொழிகேன்அடியேன் கூறுவேன். என்று-என அந்தத் திருநாவுக்கரசு
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/108
Appearance