104 - - பெரிய புராண விளக்கம்-? மூர்த் தி நாயனார் கேள்விப்பட்டருளி அழகைப் பெற்ற. சண்பையாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய வரும், மையைப் போலக் கரிய நிறம் மலரும் திருக்கழுத் தைப் பெற்ற தேவர்களினுடைய தலைவராகிய பிரமபுரீசருடைய புதல்வரும் ஆகிய அந்தத் திருஞான சம்பந்த, மூர்த்தி நாயனாரும் கோய்கின்ற செந்தாமரை மலர்களும், வெண்டாமரை மலர்களும், நீலோற்பல மலர்களும், குமுத. மலர்களும், அல்லி மலர்களும், ஆம்பல் மலர்களும், பிற. நீர்ப்பூக்களும் மலர்ந்திருக்கும் வாவியைப் பெற்ற தென் திசையில் உள்ள திருவாரூருக்கு அந்தத் திருநாவுக்கரசு நாயன் னார் எழுந்தருளித் தியாகராஜப் பெருமானாரைத் தம். முடைய திருக்கரங்களைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும் பிட்டு விட்டு, "அடியேனும் வந்து இந்தத் திருவாரூரில் தேவரீருடன் தங்கியிருப்பேன்' எனத். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரிடம் திருவாய் மலர்ந், தருளிச் செய்தார். பாடல் வருமாறு: அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணிசண்பை மைம்மலர் கண்டத் தண்டர் பிரானார் மகனாரும் கொய்ம்மலர் வாவித் தென்திரு வாரூர் கும்பிட்டே உம்முடன் வந்திங் குடன்அமர் - வேன்"என் றுரைசெய்தார். ' அம்மொழி-அந்தச் சொற்கள் அடங்கிய மொழி, ஒருமை பன்மை மயக்கம். மாலை-மாலையாகிய, ச்:சந்தி. செந்தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த திருப்பதிகத்தை: ஆகுபெயர். கேளா-திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார். தம்முடைய செவிகளில் ஏற்றருளி. அணி-அழகைப் பெற்றது. சண்பை-சண்பையாகிய சீகாழியில் திருவவதாரம் செப்.
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/110
Appearance